இஸ்லாத்தை கடந்த சுவடுகள்

இஸ்லாத்தை கடந்த சுவடுகள் 1


ஒரு தீவிர இஸ்லாமிய பற்றாளனாக இருந்து, தன்னுள் எழுந்த சந்தேகத்திற்கு விடை தேடும் பொருட்டு வேதத்தை, ஹதீஸ்களை ஆழ்ந்து படிக்கப் படிக்க அது தன்னை நாத்திகனாக மாற்றிய சுவடுகளை நமக்கு இந்தத் தொடர் மூலம் காட்டவிருக்கிறார் நண்பர் தஜ்ஜால். இதில் எழுதப்படும் அம்சங்களை கருத்துன்றிப் படிக்கும் எவரும் இஸ்லாத்திலிருந்து வெளியேறாமல் இருக்க முடியாது சவால் விடுக்கிறார். என்ன நண்பர்களே! நண்பர் தஜ்ஜால் அவர்களின் சவாலை ஏற்க நீங்கள் தயாரா?

இஸ்லாத்தை கடந்த சுவடுகள் பகுதி 1 -

72 கூட்டத்தினர் யார்?

நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு பிறகு நபித்தோழர்களுக்குள் ஏற்பட்ட குழப்பத்தை மிக விரிவாக கூறும் ஒரு சொற்பொழிவு. WIN TV ல் கடந்த 2006 ஆம் ஆண்டு புனித ரமளானின் சஹர் (அதிகாலை) நேரத்தில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அந்த சொற்பொழிவின் ஆரம்பப் பகுதிகள் நபித்தோழர்களின் உயர்வான குணங்களையும், நபி (ஸல்) அவர்களின் மீது நபித்தோழர்கள் வைத்திருந்த அன்பையும் விளக்கமாக கூறியது. வரலாறைத் தெரிந்து கொள்ள நான் ஆவலானேன்.

நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு பிறகு யார் வழி நடத்துவது? என்ற கேள்வி எழ ஆரம்பமானது குழப்பம். நபி, மரணப் படுக்கையில் இருக்கும் பொழுதே வாரிசுரிமை விவாதம் துவங்கிவிட்டதாக புகாரி ஹதீஸ் கூறுகிறது. அபூபக்கர் சித்தீக் அவர்களின் காலத்தில் பதுங்கியிருந்த ரத்தவெறி உமர் அவர்களின் ஆட்சி காலத்தில் அடக்கி வைக்கப்பட்டு இருந்தது. இறுதியில் விஷம் தோய்த்த ஈட்டியாக உமர் அவர்களின் உயிரைப் பறித்து ஆட்சி அதிகாரங்களை கைப்பற்ற வெளிப்பட்டது ஒரே கொள்கையின் கீழ் சகோதரர்களாக, ஒழுக்கசீலர்களாக, மனிதநேயமிக்கவர்களாக, பெருந்தன்மை கொண்ட பண்பாளர்களாக முஹம்மது நபி (ஸல்) அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட நபித்தோழர்கள், ஒருவருக்கொருவர் நயவஞ்சகமாக, கொலை வெறி பிடித்தவர்களாக நடந்து கொண்டர்கள்.


புஹாரி ஹதீஸ் : 4024

சயீத் பின் முஸய்யப் (ரலி) அவர்கள் கூறியதாவது.

முதல் குழப்பமான உஸ்மான் (ரலி) அவர்களின் கொலை நடைபெற்றது. அது பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களில் ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. பிறகு இரண்டாம் குழப்பமான ஹர்ரா போர் நடைபெற்றது. அது ஹுதைபிய்யா உடன்படிக்கையில் பங்கு கொண்ட ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. பிறகு மூன்றாவது (குழப்பம்) நடைபெற்றது. மக்களுக்கு ஆற்றல் இருந்தும் (அந்தக் குழப்பம்) விலகவே இல்லை.


(ஸல் – “ஸல்லல்லாஹூ அலைவஸல்லம்” என்று கூறி முஹம்மது நபிக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய நினைவூட்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. தனது பெயர் உச்சரிக்கப்படும் பொழுதெல்லாம் இந்தப் பிரார்த்தனையைக் கூறவேண்டும் என்று முஹம்மது நபி முஸ்லீம்களுக்கு கட்டளையிட்டுள்ளார் .


அலை – “அலைஸலாம்” இதர நபிகள் (இறைத்தூதர்களின்) பெயர் உச்சரிக்கப்படும் பொழுதெல்லாம் இந்தப் பிரார்த்தனையைக் கூற நினைவூட்டுவதற்காக பயன்படுத்தப்படும் சொல்.

ரலி – “ரலியல்லாஹுஅன்ஹு” குறிப்பிட்ட அந்த நபித் தோழருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய நினைவூட்டுவதற்காக பயன்படுத்தப்படும் சொல். “ஸல்லல்லாஹூ அலைவஸல்லம்” போன்று “அலைஸலாம்” “ரலியல்லாஹுஅன்ஹு” போன்ற பிரார்த்தனைகளைக் கூறவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.)


என்பத்தி இரண்டு வயதான முதியவர் உஸ்மான் அவர்களின் உயிரைப் பறித்தது எது? இதில் மிகப் பெரும் கேவலம் என்னவென்றால், அந்த கேவலமான நிகழ்ச்சியில் நபி (ஸல்) அவர்களின் பல முக்கியமான தோழர்களும் அவர்களுடைய புதல்வர்களின் பங்களிப்புதான். இவர்களில் பலர் சொர்கவாசிகளென்று நபியால் அறிவிப்புச் செய்யப்பட்டவர்கள். எத்தனை நபித்தோழர்கள் இயற்கையான மரணத்தை சந்தித்தனர்? இன்னும் சிலர், அலீ அவர்கள் உட்பட தவறுகளைக் கண்டு நியாயத்தை வெளிப்படுத்தாமல் வாய் மூடி மவுன சாமியார்களாக இருந்தனர். அலீ அவர்கள் பதவி ஏற்றவுடன், உஸ்மான் அவர்களை கொலை செய்தவர்களை பழிவாங்குவேன் என்று முழங்கினார். நாற்காலி மோகம் யாரையும் விடவில்லை.

குழப்பங்கள் தோன்றும் வேளைகளில் அதை எதிர்த்து எழுந்து நிற்பவனை விட அமைதியாக அமர்ந்திருப்பது மேலானது என்ற ஹதீஸை அவர்கள் நிலைநிறுத்தினர். விளைவு ரத்த வெறி இன்று வரை தொடர்கிறது.


புஹாரி ஹதீஸ் : 7082

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். விரைவில் சில குழப்பங்கள் தோன்றும். அவற்றுக்கிடையே (மௌனமாக) அமர்ந்திருப்பவன் (அவற்றை நோக்கி) எழுந்து நிற்பவனைவிடச் சிறந்தவன் ஆவான். எழுந்து நிற்பவன் (அவற்றை நோக்கி) நடப்பவனைவிடச் சிறந்தவன் ஆவான். அவற்றுக்கிடையே நடப்பவன் (அவற்றை நோக்கி) ஓடுபவனை விடச் சிறந்தவன் ஆவான், அதில் யார் தம்மை ஈடுபடுத்திக்கொள்கிறாரோ அவரை அவை அழிக்க முற்படும். அப்போது ஒரு புகலிடத்தையோ காப்பிடத்தையோ யார் பெறுகின்றாரோ அவர் அதன் வாயிலாகத் தம்மைத் தற்காத்துக் கொள்ளட்டும்.


இதில் மாற்றான் மனைவியை அபகரிக்கும் செயல் வேறு. அந்த நிகழ்வுகளை நினைத்தால் மலக்கழிவுகளுக்குள் விழுந்ததைப் போன்ற உணர்வு. இது யாருடைய தவறு? சஹாபாக்களுக்குள் சுயநலம், அதிகாரவெறி, நயவஞ்சகம், உச்சகட்டமாக கொலைவெறி.


உதாரணத்திற்கு, உஸ்மான் அவர்களின் கொலைக்கு பழிவாங்குவதாக கூறி, நான்காவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கலீபா அலீ அவர்களை எதிர்த்து, முஹம்மது நபி அவர்களின் அன்புக்குரிய மனைவி ஆயிஷா அவர்கள் தலைமையில் பஷராவிற்கு அருகில் குரைபா என்ற இடத்தில் போர் நிகழ்ந்தது.
போர்களத்தில், ஆயிஷாவின் ஒட்டகத்தை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நிகழ்ந்ததால் இந்தப் போர் Battle of the Camel (ஒட்டகப் போர்) என்று வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது. ஆயிஷா அவர்கள் தோற்கடிக்கப்பட்ட அந்த போரில், முஸ்லீம்களால் கொல்லப்பட்ட முஸ்லீம்களின் எண்ணிக்கை சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகம். வேறு சில வரலாற்றுக் குறிப்புகள் இருபதாயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்கிறது. இருதரப்பிலும் இறந்தவர்களில் பலர் முஹம்மது நபி மற்றும் கலீபாக்களான அபூபக்கர், உமர் உஸ்மான் ஆகியோர் தலைமையிலும் ஒன்றாக காஃபிர்களை (மாற்று மதத்தினர்- முஹம்மது நபியை இறைத்தூதர் என்று ஏற்க மறுப்பவர்கள்) எதிர்த்து போரிட்ட மிக முக்கியமானவர்கள், அலீ அவர்களுக்கும் நன்கு தெரிந்த சஹாபாக்கள்.


இவ்வுலகிலேயே, முஹம்மது நபி (ஸல்) அவர்களால் அறிவிப்புச் செய்யப்பட பத்து சொர்க்கவாசிகளுள் அலீ அவர்களும் ஒருவர். போற்றுதலுக்குரிய நான்கு கலீபாக்களுள் ஒருவர். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர். முஹம்மது நபி(ஸல்) அவர்களின் அன்புக்குரிய மகளின் கணவர் என்று பல சிறப்புக்களை உடையவர். ஆயிஷா முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு மிகவிருப்பமான மனைவி மேலும் உலக முஸ்லீம்கள் அனைவருக்கும் தாய் என்ற தகுதியுடையவர்.


போர் என்பது ஒரு உச்சகட்ட நடவடிக்கை. இந்தப் போர் ஏற்பட இவர்களில் காரணம் யார்?

இந்த ஒட்டகப் போரில் கொல்லப்பட்ட பத்தாயிரத்திற்கும் அதிகமான முஸ்லீம்களின் மரணத்திற்கு பொறுப்பு யார்?


அலீ அவர்களின் ஆதரவாளர்களில் சிலர், உயிருடன் இருக்கின்ற தோல்வியடைந்த ஆயிஷாவின் ஆதரவாளர்களை அடிமைகளாக்கி பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென்றனர். அலீ அந்த கோரிக்கையை ஏற்க மறுக்கிறார். உடனே அவர்கள் பஷரா நகரத்து மக்களின் உடைமைகளை சூறையாட அனுமதி கேட்கின்றனர். அதையும் அலீ மிகக் கடுமையாக மறுத்து, போர்களத்தில் கிடைத்த பொருட்களை பகிந்தளித்தார்.


போரில் தோல்வியடைந்தவர்களின் உடைமைகளை கொள்ளையிட்டு பெரும் செல்வம் ஈட்டலாம் என்று அலீ அவர்களுடன் இணைந்து போரிட்ட பலர், தோல்வியடைந்தவர்களின் உடைமைகளை கொள்ளையிட அனுமதி மறுக்கப்பட்டதால் மிகுந்த அதிருப்தி அடைந்தனர். இந்த அதிருப்தி முவஆவியா அவர்களுக்கு எதிரான போருக்கு படை திரட்டுவதில் அலீ அவர்களுக்கு கடுமையான இடையூறுகளை ஏற்படுத்தியது என்கிறது வரலாறு. இந்த போருக்கு அடிப்படைக் காரணமான உஸ்மான் அவர்களின் கொலைக்காக யாரும் தண்டிக்கப்படவில்லை என்பது வேதனையான உண்மை.


புஹாரி ஹதீஸ் :7070

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.


புஹாரி ஹதீஸ் : 7072

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நீங்கள் உங்கள் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்ய வேண்டாம். ஏனெனில் உங்களுக்குத் தெரியாமலேயே ஷைத்தான் உங்கள் கையிலிருந்து அதைப் பிடுங்கி (சகோதரர் மீது தாக்குதல் நடத்தி) விடக்கூடும். அதனால் நீங்கள் நரகத்தில் வீழ்ந்து விடக்கூடும்.
இவர்களில் நம்மை (முஸ்லீம்களை)ச் சேராதவர்களும் நரகத்தில் வீழ்பவர்களும் யார்? இன்று நான் காணும் ஒரு சராசரி மனிதனிடம் இருக்கும் பெருந்தன்மையும், மனிதநேயமும் நபி (ஸல்) அவர்களின் நேரடிப் பார்வையில் வளர்ந்த நெருங்கிய உறவினர்களுக்கு மத்தியிலும்கூட இல்லாமல் போனது ஏன்?


பதவி அதிகாரங்களுக்காக நெருங்கிய உறவினர்கள் தங்களுக்குள், உறவுமுறைகளின் முக்கியத்துவம் அறியாமல், மனிதாபிமானமின்றி சண்டையிட்டுக் கொள்வது போற்றுதலுக்குரியதா?

பெண்கள், தங்களது அன்றாடத் தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியேறுவதற்கு பல விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் கூறும் இஸ்லாமில், மருமகனை எதிர்த்து போர்க்களத்திற்குச் சென்ற ஆயிஷா அவர்களின் செயல் விநோதமாகத் தோன்றியது.

நிலையற்ற இவ்வுலக வாழ்க்கையின் அதிகாரங்களுக்காக ஒருவரையொருவர் கொல்லத் துணிந்த அலீ-ஆயிஷா ஆகிய இருவரிடமும், முஹம்மது நபியின் நற்போதனைகள் பயனளிக்காமல் போனது ஏன்?

மிக நெருங்கிய உறவினர்களிடமே பெருந்தன்மையாக நடந்து கொள்ளத் தெரியாதவர்கள் மாற்று மதத்தினரை என்ன செய்திருப்பார்கள் என்ற கேள்விகள் என் மனதைக் குத்திக் கிழித்தது. இத்தகையவர்களால் அறிவிக்கப்படும் செய்திகளின் நம்பகத் தன்மை என்ன? என்ற கேள்விகள் என்னுள் ஆரம்பமானது. இந்தக் கேள்விகள் என்னை உறங்க விடவில்லை.
இரத்தக்கறை படிந்த இஸ்லாமிய வரலாற்றை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. வருத்தம் தாங்க முடியாமல் 72 கூட்டத்தினர் யார்? என்ற உரையின் இறுதிப் பகுதிகளைக் கேட்க விரும்பவில்லை. என்னால் சிறிதும் நம்ப முடியவில்லை தொடர்ந்து சில நாட்கள் உறங்கவும் முடியவில்லை. நான் அந்த மிகப்பெரிய தவறுகளைச் செய்ததைப் போல என்னுள் இனம் புரியாத வலி. ஒருவேளை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் அவர்கள் வரலாற்று செய்திகள் என்ற பெயரில் தவறான தகவலைத் தெரிவித்திருக்கலாம் என நினைத்து வேறு சில மார்க்க அறிஞர்களிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்ட பொழுது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் அவர்கள் கூறிய செய்திகளனைத்தும் உண்மை என்று ஆதாரங்களையும் குறிப்பிட்டனர்.
நான் என்னுடைய வேதனையை தெரிவித்தேன். அதற்கு அவர்கள், இப்பொழுது உங்கள் மனதில் தோன்றும் சஹாபக்களின் (நபித்தோழர்கள்) மீதான தாழ்வான எண்ணம் தவறானது. அந்த துயரமான நிகழ்வு அல்லாஹ்வின் விதி. சஹாபாக்களுக்குள் நிகழ்ந்த அத்தகைய குழப்பம் அவர்களின் மீது தாழ்வான எண்ணத்தை உருவாக்கி விடும். எனவேதான் இதைப் போன்ற செய்திகள் வெளிப்படையாக விவாதிக்கப்படாமல் மறைக்கப்பட்டது என்றனர். சிலர் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரை குறை கூறினர்.

என்னால் சிறிதும் ஏற்க முடியவில்லை. இறைவனின் விதி(!?) அனைத்து பழியையும் தன் தலையில் ஏற்க இறைவன் இருக்கிறான்!. இவர்கள் எந்த பாவமும் அறியாதவர்கள்(?). மார்க்கவாதிகள், வரலாறு முழுமையாக தெரியாத பாமர மக்களிடம் மழுப்பலான பதிலைக் கூறியே சுமார் 1400 வருடங்களை கடத்தியிருக்கின்றனர். எல்லோரும் கேள்வியை ஆரம்பித்தால் எதில் முடியும் என்ற அச்சமும் பதில் கைவசமில்லை என்பதுவும் காரணமாக இருந்திருக்கலாம்.

என் சிந்தனை வேறு திசையில் நகரத் தொடங்கியது. விரும்பத்தகாத நிகழ்வாயினும் மறுக்க முடியாத உண்மையல்லவா, இதை ஆராய்ந்தால் நிச்சயமாக சில உண்மைகள் வெளிவரும் என்ற எண்ணம் வலுப்பெற ஆரம்பித்தது. மார்க்க அறிவை பெருக்கவும், மறைக்கப்பட்ட செய்திகளை அறியவும் ஹதீஸ்களில் தேடுதல் துவங்கினேன்.

சவால் தொடரும்......

தொடர் -2
வழிபாடுகளில் கவனம் தேவையா?

முகம்மதுநபி அவர்களின் மரணத்திற்குப்பின் சஹாபாக்களுக்குள் ஏற்பட்ட குழப்பத்தை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதை மறப்பதற்காக எனது சிந்தனையை வேறு வழியில் திருப்பினேன்இரத்தக்கறை படிந்த வரலாற்று செய்திகளை அறிந்த கொள்வதை முற்றிலும் நிறுத்தினேன். அரசியல் அதிகாரங்களுக்காக நடந்த படுகொலை வரலாற்றை படித்து வெறுப்படைவதற்கு பதிலாக, ஹதீஸ்களைப் பொருளுணர்ந்து படித்து மார்க்க அறிவைப் பெருக்கிக் கொள்வது என்று முடிவு செய்து கொண்டேன்.

ஒரு முறை லுஹர் தொழுகையில் இமாம் இரண்டாம் ரக்ஆத் முடிவில் அத்தஹியாத் (தொழுகையின் இடையே அமரும் சிறு இருப்பு)  அமர்வதற்கு மறந்து விட்டார். அவரைப் பின்பற்றி தொழுகையை நிறைவேற்றிய அனைவருக்கும் இந்தத் தொழுகை கூடுமா? கூடாதா? என்று குழப்பம் ஏற்பட்டது நினைவிற்கு வர தொழுகை மற்றும் நோன்பு தொடர்பாக எனக்கு ஏற்பட்ட அடிப்படையான சில சந்தேகங்களுக்கு விளக்கங்களை தெரிந்து கொள்ளவும் விரும்பினேன். கவனக் குறைவாக தொழுகையில் இருக்கும் வேளைகளில் எனக்கு தொழுகையில் ஏற்படும் மறதிகள், உதாரணத்திற்கு நான்கு ரக்ஆத்களுக்கு இரண்டு ரக்ஆத்துகளை அல்லது ஐந்து ரக்ஆத்கள் தொழுவது அல்லது  இரண்டாம் ரக்ஆத் முடிவில் அத்தஹியாத் இருக்க மறப்பது இவைகளுக்கு விளக்கம் தெரிந்து கொள்ள ஹதீஸ்களில் தேடுதல் துவங்கினேன். தொழுகையில் ஏற்படும் கவனக் குறைவுகளைப் பற்றி முஹம்மது நபி அவர்கள் என்ன சொல்கிறார்?
புஹாரி ஹதீஸ் -608
அபூஹுரைரா  (ரலி) அவர்கள் கூறியதாவது:
தொழுகைக்காக (பாங்கு என்ற) அழைப்புக் கொடுக்கப்படும் போது, பாங்கு
சப்தத்தை கேட்கக் கூடாது என்பதற்காகச் சப்தமாகக் காற்றுப் பிரிந்தவனாக ஷைத்தான் புறமுதுகு காட்டி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடித்ததும் வருகிறான் தொழுகைக்கு இகாமத் கூறும் போதும் ஓடுகிறான். இகாமத் சொல்லி முடித்ததும் முன்னோக்கி வந்து தொழுகையாளிக்கும் அவருடைய மனதிற்குமிடையில் இருந்து கொண்டு தொழுகையாளி அதற்கு முன்புவரை நினைத்திராத விஷயங்களையெல்லாம் அவருக்கு நினைவூட்டி, இதை நீ நினைத்துப்பார்; அதை நீ நினைத்துப்பார் என்று சொல்லிக்கொண்டு இருப்பான். தொழுகையாளி தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்று சந்தேகம் ஏற்படும் அளவிற்கு ஷைத்தான் அவ்வாறு செய்து கொண்டிருப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
தொழுகையில் இருக்கும் போதுதான் அதுவரையில்லாத நினைவுகளெல்லாம் வந்து என்ன தொழுதேன் என்ற நினைவையே மறக்கச் செய்து விடுகிறது இதைப் போன்ற ஷைத்தானின் பிடியிலிருந்து விலக வேண்டும் என்று உறுதிஎடுத்துக் கொண்டவனாக மறதியால் பாதிக்கப்பட்ட தொழுகைகளுக்கு விடைதேடினேன்.
புஹாரி ஹதீஸ் -1227
அபூஹுரைரா  (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு லுஹ்ரையோ அஸ்ரையோ தொழுவித்துவிட்டு சலாம் கொடுத்தார்கள். அப்போது, துல்யதைன், (ரலி) அவர்கள்  "அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதா" எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம், “இவர் கூறுவது உண்மைதானா எனக் கேட்டபோது அவர்களும்ஆம் என்றார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் பிந்திய இரண்டு ரக்அத்களைத் தொழுவித்துவிட்டு இரண்டு சஜ்தாக்களும் செய்தார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சஅத் பின் இப்றாஹீம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் மஃக்ரிப் தொழுவித்தபோது இரண்டு ரக்அத்திலேயே சலாம் கொடுத்துவிட்டுப் பேசியும் விட்டார்கள். பின்பு (நினைவு வந்ததும்) மீதம் உள்ளதைத் தொழுதார்கள். பின்னர் இரண்டு சஜ்தாச் செய்துவிட்டு, இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள், எனக் கூறினார்கள்
(புகாரி 1224 – 1230)
புஹாரி ஹதீஸ் :516
அபூகா தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தமது மகள் ஜெய்னப் அவர்களின் குழந்தை உமாமா வை (தோளில்) சுமந்து கொண்டு தொழுதார்கள். ஸஜ்தாவுக்கு செல்லும் போது இறக்கி விடுவார்கள். நிற்கும் போது தூக்கிக் கொள்வார்கள்.
இதே போல் என்னுடைய அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்தது. இதைப்பற்றி எல்லோரும் நன்கு அறிவர்  இதில் என்ன புதுமை உள்ளது என்கிறீர்களா?. புதுமை ஒன்றுமில்லைதான். ஆனால் அதிலிருந்து கேள்விகள் சில எழுந்தது. 

குழந்தையைத் தோளில் சுமந்து கொண்டு எப்படித் தொழ முடியும்? குறிப்பிட்ட அந்த ஹதீஸில் கூறப்பட்டதைப் போல தொழுதால் அது தொழுகையைப் போலவா இருக்கும்? எனக்குப் புரியவில்லை…! உங்களுக்கு...?

நான்  இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் வாழும் ஒரு சராசரி மனிதன். உலகத் தேவைகளால், தினமும் புதுப்புதுப் போரட்டம். என் சிந்தனையை ஒருங்கிணைப்பது எனக்கு கடினமான பணி. முகம்மதுநபி அவர்கள் வாழ்ந்த சூழ்நிலை வேறு. என்னைப் போல் ஒரு சராசரி மனிதவாழ்க்கை வாழ்ந்திருந்தலும், அவருடைய ஆன்மா அல்லாஹ்வின் மிகப் பெரிய அன்புக்கும் ஆசைக்கும் உரியது. அவருடைய வாழ்க்கை முழுவதும் அல்லாஹ்விற்காகவும், அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றவும் இருப்பதாக முகம்மதுநபி அவர்களே சொல்கிறார். இறைவனை வழிபடும் முறையையும் அதன் ஒழுக்கத்தையும், மேன்மையையும் கற்பித்ததும் அவர்தான். அத்தகைய மனிதருக்கு என்னை போன்ற அற்பமனிதனுக்கு ஏற்படும் கவனக் குறைவுகளும்  ஏற்பட்டது ஏன்? அவரையும் ஷைத்தான் விடவில்லையா? அவர் தொழும்போதும் அவருடைய மனதிற்குமிடையில் இருந்து கொண்டு அவர் அதற்கு முன்புவரை நினைத்திராத விஷயங்களையெல்லாம் அவருக்கு நினைவூட்டி, இதை நீ நினைத்துப்பார்; அதை நீ நினைத்துப்பார் என்று சொல்லிக் கொண்டு இருந்தானா?
தொழுகையின் பொழுது போருக்கான யுக்திகள் குறித்து யோசிக்கிறேன் என்கிறார் உமர் (ரலி) அவர்கள்.
(புகாரி)
வழிபாடுகளில் மனம் ஒருநிலைப்படுதலும், வழிமுறைகளில் தீவிரமும் தேவையற்றதாவிடை தெரியாத நிலையில் ஹதீஸ்களில் தீவிரமானேன்.
புஹாரி ஹதீஸ் : 1217     
ஜாபிர்பின் அப்துல்லாஹ் (ரலி) அறிவித்தார்.
அவர்கள் என்னை தம் அலுவல் விஷயமாக (வெளியூர்) அனுப்பினார்கள். நான் அந்த வேலையை முடித்துத் திரும்பி வந்து நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினேன். அவர்கள் எனக்கு மறுமொழி கூறவில்லை. என் மனதில் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த சில எண்ணங்கள் தோன்றின. நான் தாமதமாக வந்ததால் என்மேல் நபி(ஸல்) கோபமாக இருக்கக் கூடும் என்று மனதிற்குள் கூறிக் கொண்டேன். பிறகு மறுபடியும் ஸலாம் கூறினேன். அவர்கள் பதில் கூறவில்லை. முன்பைவிடக் கடுமையாக சந்தேகங்கள் ஏற்பட்டன. பின்னர் மீண்டும் ஸலாம் கூறினேன். எனக்கு பதில் ஸலாம் கூறிவிட்டு நான் தொழுது கொண்டிருந்ததால்தான் உமக்குப் பதில் கூறவில்லை என்று கூறினார்கள். (நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தபோது) கிப்லா அல்லாத திசையை நோக்கி தம் வாகனத்தின் மீதமர்ந்து தொழுது கொண்டிருந்தனர்.
இது ஒரு சிறந்த கோட்பாடு அல்லது சிறந்த கட்டளையாகும், அதாவது ஒருவர் தன்னை படைத்தவனை, காப்பவனை தொழுது கொண்டு இருக்கும் வேலையில், அதைவிட முக்கியமான வேலை அவருக்கு என்ன இருக்கப் போகிறது?
ஆனால், முகம்மதுநபி  இதற்கு நேர் எதிராக‌ நடந்துக்கொண்டு, தான் சொன்னதை தானே செய்யாமல் இருந்திருக்கிறார். அதாவது ஒரு மனிதன் தொழுகையில் இருக்கும் போது, முகம்மதுநபி அவரை அழைத்தார், அதற்கு அம்மனிதர் தொழுகையில் இருந்தவாரே பதில் தரவில்லை என்றுச் சொல்லி, அம்மனிதரை முஹம்மது நபி (ஸல்) கடிந்துக்கொண்டார். இதில் இன்னும் மோசமான‌ தகவல் என்ன‌வென்றால், அந்த‌ சஹாபி தன் தொழுகையை பாதியில் நிறுத்திவிட்டு அல்லாஹ்வின் தூதருக்கு பதில் தரவேண்டும் என்பதை நியாயப்படுத்த‌ முஹம்மது முகம்மதுநபி குர்ஆன் வசனத்தையே ஆதாரமாக‌ காட்டியது தான்!
புஹாரி ஹதீஸ் : 4647     
அபூ ஸயீத் இப்னு முஅல்லா(ரலி) அறிவித்தார்
நான் ('மஸ்ஜிதுந் நபவீ' பள்ளிவாசலில்) தொழுது கொண்டிருந்தேன். அப்போது என்னைக் கடந்து சென்ற இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் தொழு(து முடிக்கு)ம்வரை அவர்களிடம் செல்லவில்லை. பிறகு நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம், 'நீங்கள் ஏன் என்னிடம் உடனே வரவில்லை? அல்லாஹ், 'இறைநம்பிக்கையாளர்களே! இறைத்தூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரைந்து பதில் அளியுங்கள்' என்று கூறவில்லையா?' எனக் கேட்டார்கள். …


ஷாஃபி பிரிவைச் சேர்ந்தவன் நான். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. மனைவியை தொட்டால் ஒளு (தொழுகைக்காக செய்து கொள்ளப்படும் தூய்மை)  முறிந்துவிடும் என்றும் தொழுகை இறைவனை முன்நோக்கும் செயல் எனவே அதிக கவனம் தேவை, தொழுபவரின் குறுக்கே செல்லும் குழந்தையைக்கூட கண்டிப்பதை பார்த்து வளர்ந்தவன்.
புஹாரி ஹதீஸ் : 0509
அபூஸாலிஹ் தக்வான் அஸ்ஸம்மான் (ரஹ்)
அபூஸாலிஹ் தக்வான் அஸ்ஸம்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மக்களில் எவரும் தமக்கு குறுக்கே செல்லாமலிருக்க தடுப்பு ஒன்றை வைத்துக் கொண்டு அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் ஜுமுஆ நாளில் தொழுதுகொண்டிருப்பதை நான் கண்டேன். அப்போது பனூ அபீமுஜத் குலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் அபூசயீத் (ரலி) அவர்களுக்கு முன்னால் கடந்து செல்லப் போனார். எனவே, அபூசயீத் (ரலி) அவர்கள் அவரது நெஞ்சில் கையால் உந்தினார்கள். அபூசயீத் (ரலி) அவர்களுக்கு முன்னால் (அவர்களைக் கடந்து) செல்வதைத் தவிர நடை பாதையேதும் இல்லையெனக் கண்ட அந்த இளைஞர், மீண்டும் அவர்களைத் தாண்டி (குறுக்கே) செல்லப் போனார். எனவே அபூசயீத் (ரலி) அவர்கள் அவரை முன்பைவிடக் கடுமையாக உந்தினார்கள். உடனே அந்த இளைஞர் அபூசயீத் (ரலி) அவர்களை ஏசினார். பிறகு (மதீனாவின் ஆளுநராயிருந்த) மர்வான் பின் ஹகமிடம் சென்று அபூசயீத் (ரலி) அவர்கள் தம்மிடம் நடந்து கொண்டது பற்றி முறையிட்டார். அவருக்குப் பின்னால் அபூசயீத் (ரலி) அவர்களும் மர்வானிடம் சென்றார்கள். அப்போது மர்வான், “உங்களுக்கும் உங்கள் சகோதரரின் புதல்வருக்குமிடையே என்ன பிரச்சினை, அபூசயீத் அவர்களே", என்று கேட்டார். அப்போது அபூசயீத் (ரலி) அவர்கள், “மக்களில் எவரும் தமக்கு குறுக்கே செல்லாமலிருக்க தமக்கு முன்னால் ஏதேனும் ஒன்றை தடுப்பாக வைத்துக் கொண்டு உங்களில் ஒருவர் தொழும்போது எவரேனும் தமக்கு முன்னால் (குறுக்கே) கடந்து செல்ல முயன்றால் அவரைத் தள்ளிவிடுங்கள். அவர் (விலகிக்கொள்ள) மறுத்தால் அவருடன் சண்டையி(ட்டுத்த)டுங்கள். ஏனெனில் அவன்தான் ஷைத்தான்", என நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன் (எனவேதான், இந்த இளைஞரிடம் இவ்வாறு நான் நடந்து கொண்டேன்)”, என்று கூறினார்கள்.
புஹாரி ஹதீஸ் :0510
புஸ்ர் பின் சயீத் (ரஹ்)
புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: தொழுது கொண்டிருப்பவருக்கு குறுக்கே நடந்து செல்பவர் அடைந்துகொள்ளும் பாவம் என்ன என்பது பற்றித் தாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து என்ன செவியுற்றீர்கள், என்று அபூஜுஹைம் அப்துல்லாஹ் அல்அன்சாரி (ரலி) அவர்களிடம் கேட்டுவருமாறு ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் என்னை அனுப்பிவைத்தார்கள். (நான் சென்று கேட்டேன்). அப்போது அபூஜுஹைம் (ரலி) அவர்கள் கூறினார்கள், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் : தொழுது கொண்டிருப்பவருக்கு குறுக்கே செல்பவர் அதனால் தமக்கு ஏற்படு(ம் பாவத்) தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்கு முன்னால் (அவர் அருகில்) செல்வதற்குப் பதிலாக நாற்பது (நாட்கள்_மாதங்கள்_வருடங்கள் நின்று கொண்டிருப்பார். அத்தகைய நாற்பது) அவருக்கு நல்லதாக இருந்திருக்கும். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபுந்நள்ர் சாலிம் பின் அபீ உமைய்யா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் நாட்களில் நாற்பது, என்று சொன்னார்களா அல்லது மாதங்களில் நாற்பது, என்று கூறினார்களா அல்லது, வருடங்களில் நாற்பது, என்று குறிப்பிட்டார்களா என்று எனக்குத் தெரியவில்லை.
மேற்கண்ட ஹதீஸ்கடந்து போவதற்கு வேறு வழியின்றி, தொழுபவரின் குறுக்கே  நடந்து  செல்வதையே  குற்றம் என்று தடுக்கிறது. ஆனால் இறைவனைத் தொழுது கொண்டிருப்பவரை நோக்கி காலை நீட்டிக் கொண்டிருப்பதும், அது தனது வழிபாட்டிற்கு இடையூறாக இருப்பதை உணர்த்திய பின்னரும் மீண்டும் காலை நீட்டிக் கொண்டிருப்பவரை என்னவென்று சொல்வது? 

புஹாரி ஹதீஸ் -1209
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தொழும்போது நபி (ஸல்) அவர்களை நோக்கி என் கால்களை நான் நீட்டிக் கொண்டிருப்பேன். அவர்கள் சஜ்தாச் செய்யும்போது என்னை விரலால் குத்துவார்கள். உடனே கால்களை மடக்கிக் கொள்வேன். அவர்கள் எழுந்ததும் கால்களை நீட்டிக்கொள்வேன்
ஷாஃபி பிரிவைச் சேர்ந்தவன் நான். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது ஆயிஷா  அவர்களின் இந்த செயலை முகம்மதுநபி அவர்கள் தடுத்ததாகவோ, கண்டித்ததாகவோ எந்த தகவலுமில்லை.  ஆயிஷா   ஏன் அவ்வாறு செய்தார்?  முகம்மதுநபி ஏன் கண்டிக்கவில்லை? எனக்கு கற்பிக்கப்பட்டது யாருடைய வழிமுறை? ஒருவேளை மனைவியின் மீது கொண்ட அதிகமான அன்பு காரணமாக இருக்கலாம் என்று முடிவு செய்து கொண்டேன்.
அதை உறுதி செய்ய நபி (ஸல்) அவர்களின் குடும்ப வாழ்க்கையைப்பற்றித் தெரிந்து கொள்ள விரும்பினேன்.

புகாரி ஹதீஸ் -5068
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது
நபி (ஸல்) அவர்கள் ஒரே இரவில் தம் துணைவியர் அனைவரிடமும் சென்று வந்து விடுவார்கள்.  (அப்போது) அவர்களுக்கு ஒன்பது துணைவியர் இருந்தனர். இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
(புகாரி 5068,5215)
புகாரி ஹதீஸ்
நபி (ஸல்) அவர்கள் இரவில் அல்லது பகலில் தங்களின் மனைவிமார்களிடம் குறிப்பிட்ட நேரத்தில் தங்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்களின் மனைவியர் பதினோரு பேர் இருந்தார்கள் என அனஸ் இப்னு மாலிக் (ரலி) கூறியபோது நான் அவரிடம், அதற்கு நபி (ஸல்) அவர்கள் சக்தி பெறுவார்களா? என்று நான் கேட்டதற்கு நபி (ஸல்) அவர்களுக்கு முப்பது பேர்களுடைய சக்தி கொடுக்கப்பட்டுள்ளது' என நாங்கள் பேசிக் கொள்வோம்' என அனஸ் (ரலி) கூறினார்" என கதாதா அறிவித்தார்.
இந்த ஹதீஸை படிக்கும் வேளையில் அதிர்ச்சியடைந்தேன்  காரணம், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மனைவியர்களின் எண்ணிக்கை  திருக்குர்ஆன்  அனுமதித்த அளவை விட இரண்டு மடங்குகள் அதிகம். மேலும் இந்த ஹதீஸ்கள் அவரது பாலியல் வலிமையைப் பற்றியும் கூறவே மிகுந்த குழப்பமடைந்த என் மனதில் தடுமாற்ற எண்ணங்கள் ஆரம்பமாயின. எனது மனதில் தோன்றிய சந்தேகங்களை பிறரிடம் வெளிப்படுத்தவும் தயங்கினேன். இந்த தடுமாற்றம் சரியானதா?

முஸ்லீம் ஹதீஸ் எண் : 188, அத்தியாயம் : 1, பாடம் : 1.60
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).
 நபித்தோழர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "எங்கள் உள்ளத்தில் சில (தடுமாற்றமான) விஷயங்கள் எழுகின்றன. அவற்றை (வெளிப்படுத்திப்) பேசுவதைக்கூட நாங்கள் மிகப்பெரும் (பாவ)காரியமாகக் கருதுகிறோம்" என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உண்மையிலேயே நீங்கள் அத்தகைய உணர்வுகளுக்கு உள்ளாகின்றீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள், "ஆம்" என்று பதிலளித்தார்கள். அதற்கு, "அதுதான் ஒளிவுமறைவற்ற இறைநம்பிக்கை" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

எனது தடுமாற்றமும் ஒருவேளை ஒளிவுமறைவற்ற இறை நம்பிக்கையாக இருக்கலாம் என்று முடிவு செய்து கொண்டேன். மாற்று மதத்தினர் நபி (ஸல்) அவர்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள்  நினைவுக்கு வரவே, என் கவனம் பலதாரமண ஆய்வில் செல்லத் துவங்கியது...

தொடர் -3 
சாத்தானின் வேதம்
            பெண் மோகம் நபி (ஸல்) அவர்கள் மீது சுமத்தப்படும் மிகப் பெரிய குற்றச் சாட்டு. என் மாற்று மத நண்பர்கள், உங்களது நபிக்கு பல மனைவிகள் உண்டாமே? என கேலியாக கேட்பார்கள். நான் அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் செய்து கொண்ட அனைத்து திருமணங்களும் விதவைகளுக்கும், ஆதரவற்ற பெண்களுக்கும் அளிக்கப்பட்ட மறுவாழ்வு மேலும், இன்று புரட்சிகரமானது என்று போற்றப்படும் விதவைகள் திருமணத்தை 1400 ஆண்டுகளுக்கு முன்பே முன்மாதிரியாக இருந்து நடைமுறையிலும் வாழ்ந்து காட்டியவர் எங்கள் தலைவர் முஹம்மது நபி என்று விளக்கமளிப்பேன்.
உண்மையில், முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எத்தனை மனைவிகள் இருந்தனர் என்பது கூட எனக்குத் தெரியாது. நபி (ஸல்) அவர்களை விட, கதீஜா அம்மையார் வயது முதிர்ந்த விதவைப் பெண்மணி என்பது மட்டுமே எனக்குத் தெரிந்த அதிகபட்ச விஷயம். நான்கு மனைவிகள் இருந்திருக்கக் கூடும் என்று எண்ணிக் கொள்வேன். காரணம் திருக்குர்ஆனின் அனுமதி அவ்வளவுதான். மேலும் திருக்குர்ஆனின்  போதனைகளை சிறிதும் தவறாமல் வாழ்ந்து காட்டிய உத்தமர் என்று இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் புகழாரங்களை பலமுறை கேட்டிருக்கிறேன். அவர்களது கூற்று உண்மையே என்பதில் உறுதியாகவும் இருந்தேன்.
ஈரான் நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியரான சல்மான் ருஷ்டி எழுதிய, THE SATANIC VERSES (சாத்தானின் வேதம்) என்ற புத்தகம் வெளிவந்த பொழுது, மேற்கத்திய நாடுகள் இஸ்லாமின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் களங்கமற்ற  தலைவர் முஹம்மது நபியின் மீது "பெண் பித்தர்" என்ற பொய்யான செய்திகளை ஊடகங்களில் திட்டமிட்டு பரவச் செய்கிறது என்று முஸ்லீம்களிடமிருந்து கண்டனக் குரல் ஓங்கி ஒலித்தது. இது நமது விரலே நமது கண்ணை குத்திக் கிழித்ததைப்  போல எனக்குத் தோன்றியது.
THE SATANIC VERSES-ல் முஹம்மது நபியை கடுமையாக விமர்சனம் செய்திருப்பதாகவும், அனைத்து முஸ்லீம்களுக்கும் தாய் போன்ற தகுதியுடைய நபி (ஸல்) அவர்களுடைய மனைவியர்களை விபச்சாரிகளாக சித்தரித்திருப்பதாகவும் அறிந்த பொழுது சல்மான் ருஷ்டியை மிகவும் வெறுத்து, என்னுடைய பிரார்த்தனைகளிலும் அவரை சபித்தேன். சல்மான் ருஷ்டிக்கு வழக்கம் போல கடுமையான எதிர்ப்பும்  மரண தண்டனை அறிவிப்பும் மட்டுமே நம்மால் தரப்பட்டது. திருக்குர்ஆனிலிருந்து வெளி வரும் ஒளிக்கதிர்கள் சல்மான் ருஷ்டியை அழிப்பதாக ஒரு பாகிஸ்தானிய திரைப்படம் சித்தரித்து தனது கோபத்தைத் தீர்த்துக் கொண்டது.
இறைவனால் இறக்கப்பட்டது, இப்பிரபஞ்சத்தின் மாபெரும் அற்புதம் என்று முஸ்லீம்களால் புகழப்படும் திருக்குர்ஆனை சாத்தானின் வேதம் என்று கூறிய, சல்மான் ருஷ்டியைப் போன்ற விஷக் கிருமிகள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக இருந்தேன். களங்கமற்ற ஒரு மாமனிதரை இழிவுபடுத்தும் விதமாக எழுதிய சல்மான் ருஷ்டி மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதை மனப்பூர்வமாக ஆதரித்தேன். இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், திருக்குர்ஆனின் மகத்துவத்தையும், முஹம்மது நபி அவர்களின் களங்கமற்ற தன்மையையும், உலக மக்களுக்கும், குறிப்பாக  மேற்கத்திய ஊடகங்களுக்கும் தக்க ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும் என்றும் விரும்பினேன். பெரிதாக எதுவும் நிகழவில்லை  காலப் போக்கில் எல்லாம் மறந்து போனது.

நான் தேடலின் பாதையில் செல்கையில், சல்மான் ருஷ்டியின் நினைவு வந்தது. சல்மான் ருஷ்டி அவ்வாறு ஏன் கூற வேண்டும்? என்ற சிந்தனை என்னுள் மேலோங்கத் தொடங்கியது. இஸ்லாமிய அறிஞர்கள் மறுப்பதைப் போல, சல்மான் ருஷ்டியின் குற்றச்சாட்டுகள் அபாண்டமான பொய்யாக இருப்பின், மிகக் கடுமையான எதிர்ப்புகளுக்கும் மத்தியில், உயிருக்குத் துணிந்து ஒரு பொய்யை சொல்ல வேண்டிய அவசியம் என்ன? திருக்குர்ஆன் உட்பட இஸ்லாமின் முழுப் பின்னணியையும் தெரிந்து கொள்ள விரும்பினேன். முதலில், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது சுமத்தப்படும் "பெண் மோகம்" கொண்டவர் என்ற குற்றச்சாட்டிற்கு சரியான பதில் தெரிந்து கொள்ள விரும்பினேன். THE SATANIC VERSES இந்தியாவில் தடை செய்யப்பட்டதால் அதைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்களின பலதார மணவாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பிய பொழுது சல்மான் ருஷ்டியின்  குற்றச்சாட்டுகளுக்கு விடை தெரிந்தாலே போதுமானது என்று முடிவு செய்தேன்.

சல்மான் ருஷ்டியின் குற்றச்சாட்டுகளுக்கு, இஸ்லாமிய அறிஞர்களின் மறுப்புகள் புத்தகமாக வெளிவந்திருந்தது. அவற்றைப் படிக்கையில் என் மனம் திருப்தி அடையவில்லை. ஏனெனில், மார்க்க அறிஞர்கள் பலருக்கு சல்மான் ருஷ்டியை கடுமையாக எதிர்ப்பதில் இருந்த ஆவர்வம் ஆதாரங்களுடன் பதில் அளிப்பதில் இருக்கவில்லை. சிலர் THE SATANIC VERSES-ல் அவர் பயன்படுத்திய கீழ்த்தரமான (F...) வார்த்தைகளை எண்ணி கணக்கிட்டு சல்மான் ருஷ்டியை இழிவானவர் என்றனர். இன்னும் சிலர் இதைப் போன்று அநாகரீகமாக விமர்சித்தால் பதில் கூறமுடியாது என்றனர். இன்னும் சிலர், சல்மான் ருஷ்டியின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்து, நபி (ஸல்) அவர்களைப் பற்றி விமர்சிக்க சல்மான் ருஷ்டி தகுதியற்றவர் என்றனர். சல்மான் ருஷ்டியின் குற்றச்சாட்டுகளுக்கு,  இஸ்லாமிய அறிஞர்களால் மிகச்சரியான ஆதாரங்களுடன் பதில் அளிக்க முடியவில்லை என்றே தோன்றியது. நபியின் பலதார மணத்திற்கான காரணங்களைத்  தெரிந்து கொள்ள அவரது மனைவியர்களின் பின்னணியையும் தெரிந்து கொள்வது அவசியம் என்று முடிவு செய்தேன்.  

எனக்கு கிடைத்த தகவல்கள் என்னை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனெனில் முதலில், நபி (ஸல்) அவர்களுக்கு   நான்கு மனைவிகள் இருக்கலாம் என்று நான் (தவறாக) நினைத்தது ஒன்பதானது, ஒன்பது பதிமூன்றாக உயர்ந்து இருபத்து இரண்டைக் கடந்நது முப்பத்தி இரண்டைத் தொட்டது. நபி (ஸல்) அவர்களுக்கு நான்கு மனைவியர் இருக்கலாம் என்ற யூகத்தில்நான்கு மனைவியர்களைத் திருமணம் செய்ததற்கான காரணத்தை அறிந்து கொள்ள ஆய்வில் இறங்கிய எனக்கு தலைசுற்றத் தொடங்கியது…
மனைவியர்களின்  பட்டியல்

ஒரு இஸ்லாமிய இணையதளம் பதிமூன்று மனைவிகளின் பட்டியலை தந்து  குற்றச்சாட்டுகளை மறுத்தது. நபி (ஸல்) அவர்களின்   பலதார மணங்கள் சமுதாய நலனை அடிப்படையாக கொண்டது வேறு விதமாக கண்பது தவறானது எனவும் எச்சரித்தது. இதுதான் அவர்கள் கொடுத்த பட்டியல்,

மனைவியர்களின் / அவருடன்             மனைவியர்களின்    நபி அவர்களின்       
வாழ்ந்த பெண்களின் பெயர்கள்          திருமண வயது         திருமண வயது       
  1. கதீஜா                                                                       40                                 25
  2. சவ்தா                                                                       ?                                  52
  3. ஆயிஷா                                                                   6                                  52
  4. ஹப்ஸா                                                                   22                                 56
  5. ஜைனப்                                                                     30                                 56
  6. உம்முஸல்மா                                                         26                                 56
  7. ஜைனப்                                                                     37                                 58
  8. ஜுவேரியா (போர் கைதி)                                   20                                 58
  9. உம்மு ஹபீபா                                                      36                                 60
  10. ஸபியா (போர் கைதி /அடிமை)                      17                                 60
  11. மாரியா (கிருத்துவ பெண் /அடிமை)              17                                 60
  12. ரைஹானா ( போர் கைதி/ அடிமை)                15                                 60
  13. மைமூனா                                                                36                                 53

மேற்கண்ட பதிமுன்று மனைவியர்களுடன் இன்னொரு இணையதளம் தரும் பட்டியல் இதோ,

நபி (ஸல்) அவர்கள்   மேலும் பல  பெண்களைத் திருமணம் செய்திருப்பதாக ஹதீஸ் ஆய்வாளர் அலீ தஷ்தி குறிப்பிடுகிறார் (இவர் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்)  அவர் தரும் பட்டியலையும் காண்போம்

இவர்களைப் பற்றிய குறிப்புகள் 
  1. ஃபாத்திமா                             al-Tabari vol.9 p.39, al-Tabari vol.9 p.139
  2. ஹெந்த் (விதவை)               Sahih Muslim vol.3 no.4251-4254 p.928-929.
  3. அஸ்மா பின்த் நுக்மான                 Bukhari vol.7 book 63 no.181 p.131,132
  4. அஸ்மா                                             a-Tabari vol.9 p.135-136. al-Tabari vol.39 p.166

உறுதியற்ற உறவுகள் / சுருக்கமாக திருமணம் செய்தல்
  1. உம்மு ஷரிக்                         al-Tabari vol.9 p.139.
  2. ஜைனப்                        al-Tabari vol.7 p.150 footnotes 215,216 and al-Tabari vol.39 p.163-164
  3. கவ்லா                                               al-Tabari vol.39 p.166   
  4. முலைகா பின்த் தாவூத்                 al-Tabari vol.8 p.189
  5. அல் ஷன்பா பின்த் அம்ர்             al-Tabari vol.9 p.136
  6. அல் அலீய்யா                                   al-Tabari vol.39 p.188
  7. அம்ராஹ் பின்த் யஜீத்                    al-Tabari vol.39 p.188
  8. கத்ைலா பின்த் கைஸ்                 al-Tabari vol.9 p.138-139
  9. ஸானா பின்த் ஸூஃப்யான்            al-Tabari vol.39 p.188
  10. ஷாராஃப் பின்த் கலீபா                    al-Tabari vol.9 p.138
  11. ஜைனப்          
  12. பெயர் தெரியாத ஒரு பெண்          al-Tabari vol.39 p.187

 Wiki Islam தரும் பட்டியல் இதோ
  1. Khadija/Khadijah                                             
  2. Sauda/Sawda bint Zam'a/Zam’ah
  3. A’isha
  4.  A’isha’s Slaves
  5. Umm Salama
  6. Hafsa/Hafsah
  1. Zainab/Zaynab bint Jahsh
  2. Juwairiya/yya/yah
  3. Omm/Umm Habiba
  4. Safiya/Safiyya/Saffiya
  5. Maimuna/Maymuna bint Harith
  6. Fatima/Fatema/Fatimah
  7. Hend/Hind
  8.  Sana bint Asma’ / al-Nashat
  9.  Zainab/Zaynab bint Khozayma
  10. Habla
  11. Divorced Asma bint Noman
  12. Mary/Mariya the Copt/Christian
  13. Rayhana/Rayhanah bint Zaid
  14. Divorced Umm Sharik /Ghaziyyah bint Jabir
  15. Maymuna / Maimuna
  16. Zainab
  17. Khawla / Khawlah bint al-Hudayl
  18. Divorced Mulaykah bint Dawud
  19. Divorced al-Shanba’ bint ‘Amr
  20. Divorced al-‘Aliyyah
  21. Divorced ‘Amrah bint Yazid
  22. Divorced an Unnamed Woman
  23. Qutaylah bint Qays
  24. Sana bint Sufyan
  25. Sharaf bint Khalifah
சரியான ஆதார வரிசையில்லமல் விடுபட்டவர்களும் வலக்கரங்களை சொந்தமாக்கிக் கொண்டவர்களின் எண்ணிக்கையை இணைத்தால் நபி (ஸல்) அவர்களின் மனைவிர்களின் எண்ணிக்கை சுமார் நாற்பதை நெருங்கும். உலகத்திற்கே அருளாக அனுப்பப்பட்டவர், இறைவனை அடையும் வழியை போதிக்க வந்தவர்இத்தனை பெண்களுடன் எப்படி வாழ முடியும் ?


தொடர் -4

   சர்வ வல்லமையுடைய இறைவனால் தேர்ந்தெடுத்துக் கொள்ளப்பட்டவர், இறைச்செய்தியை மக்களிடையே கூறவந்தவர், இத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்தவர் சராசரி மனித வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாலும், அவர்களால் அற்பமான இன்பங்களை நாடிச் செல்ல மாட்டார்கள் என்றும், அவர்கள் உணர்ந்து கொண்ட பேரின்பத்தின் முன் இந்த உலகமும் அதன் இன்பங்களும் அற்பமானவைகளே என்றும் நினைத்துக் கொண்டேன்

நிலையற்ற இவ்வுலக வாழ்வின் இன்பங்களில் மூழ்கி நிலையான மறுஉலகவாழ்க்கையைத் தொலைத்துவிட வேண்டாம் என்பதே முஹம்மது நபி உலக மக்களுக்கு  அச்சமூட்டி கூறிய உபதேசங்கள். எனவே முஹம்மது நபி (ஸல்) அவர்களின் திருமணங்கள் உடல் தேவைகளுக்கானது அல்ல.  இது நிச்சயமாக, ஆதரவற்ற பெண்களுக்கு மறுவாழ்வளிக்க செய்து கொண்ட திருமணங்கள்தான் என்பதை குழப்பமடைந்த எனது மனதிற்கு உணர்த்த  விரும்பினேன்.

நபி (ஸல்) அவர்களின்   மனைவியர்களின் பின்னணியை ஆராய்ந்தால் சமுதாய காரணங்கள் என்னவென்பது தெளிவாகும். விளக்கங்களை அறிந்து கொள்ள மார்க்க அறிஞர்கள் எழுதிய புத்தகங்கள் சிலவற்றைப் படித்தேன் அவை எனக்குப் போதுமான தகவல்களைத் தரவில்லைஎனவே விரிவான செய்திகளைத் தெரிந்து கொள்வதற்காக இணையதள வலைக்குள் இறங்கினேன்.

"The Prophet of Allah liked three worldly objects - perfume, women and food."இது ஆயிஷா அவர்களின் வழியாக அறிவிக்கப்படும் ஒரு நம்பகமான ஹதீஸ்.

வாசனை திரவியங்கள், பெண்கள் மற்றும் உணவு - அல்லாஹ்வின் தூதருக்கு விருப்பமான மூன்று உலக விஷயங்கள். (வேறு சில அறிவிப்புகளில், முஹம்மது நபிக்கு மிகவும் பிடித்தமான உலக விஷயங்கள், வாசனை திரவியங்களும், பெண்களுமே என காணப்படுகிறது)

"பெண்களை மிகவும் பிடிக்கும்" என்பதன் பொருள் அன்பு செலுத்துவதைக் குறிப்பிடுவதாக இருக்க வேண்டும், அதனால் தான் அவர்களுக்கு உதவி அல்லது பாதுகாப்பு வழங்கும் நோக்கத்தின் காரணமாகவே இவ்வளவு திருமணங்களும் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று என்னை அமைதிப்படுத்திக் கொண்டேன். ஆதரவற்ற பெண்களுக்கு உதவி அல்லது பாதுகாப்பு வழங்குவதற்காக அனைத்து பெண்களையும், நபி (ஸல்) அவர்களே திருமணம் செய்து கொள்வதுதான் சரியான தீர்வா?

நபி (ஸல்) அவர்கள், தானே திருமணம் செய்து கொண்டிருப்பதைவிட தனது உத்தம நண்பர்களுக்கு திருமணம் செய்து வைக்க இயலுமே?, அல்லது அவர்களுக்கு வேறு வகைகளில் உரிய பாதுகாப்பு வழங்கியிருக்க முடியுமே?

என் மனதில் பலவிதமான எதிர்க்கேள்விகள் உருவாகிக் கொண்டிருந்த பொழுது வேறொரு ஹதீஸ் கண்களில் பட்டது.
Ibn Sad's  “Kitab al-Tabaqat al-Kabir, volume 1”, pages 438, 439.
…The apostle of Allah said, "Gabriel brought a kettle from which I ate and I was given the power of sexual intercourse to forty men."

(அல்லாஹ்வின் தூதர் கூறினார், ஜிப்ரீல் ஒரு பாத்திரத்தில் கொண்டு வந்ததை நான் அருந்தியதிலிருந்து எனக்கு நாற்பது ஆண்களின் பாலியல் பலம் கிடைத்து விட்டது.)

ஜிப்ரீல் (கேப்ரியேல் என்ற தேவ தூதன்) அல்லாஹ்வின் வஹீ செய்திகளைக் கொண்டு வந்தார் என்று மார்க்க அறிஞர்கள் கூறுவதை அறிவேன். நபி(ஸல்) அவர்களுக்கு ஆண்மையை அதிகரிக்கச் செய்வதற்கு மருந்துகளையும் கொண்டு வந்தாரா?
இன்றைய மொழியில் சொல்ல வேண்டுமென்றால், அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு, ஜிப்ரீல் மூலமாக "வயாக்கரா"வை விட வீரியமிக்க மருந்துகளை வழங்கினான் என்று சொல்லலாம்.

அப்படியானால், முஹம்மது நபியின் இத்தனை திருமணங்களுக்கும் அடிப்படைக் காரணம்  என்ன?

எண்ணற்ற மனைவியர்களுடன் உல்லாசம் காண்பதற்காகத்தான்.

அல்லாஹ்வின் செய்தியை கூற வந்தவருக்கு இந்த பாலியல் வலிமை எந்த வகையில் உதவும்?  நாற்பது ஆண்களுக்கு சமமான வலிமை துன்பத்திலிருப்பவருக்கு உதவவோ, தன்னை இறைத்தூதுவராக ஏற்றுக் கொண்ட மக்களைப் பாதுகாக்கவோ வழங்கப்படவில்லை.  அற்ப உணர்வுகளில் உல்லாசம் காணவே  நாற்பது ஆண்களுக்கு சமமான பாலியல் வலிமை வழங்கப்படடுள்ளது. என்னுடைய உறுதியான நம்பிக்கைகள் ஆட்டம் காணத் துவங்கியது. மேற்கண்ட ஹதீஸ்களைக் கண்டவுடன்  நபி (ஸல்), பெண் மோகம் கொண்டவர் என்ற குற்றச்சாட்டிற்கான அடிப்படை விளங்கியது.

எனவே நபி (ஸல்) அவர்களின் குடும்ப வாழ்க்கையையும், பாலியல் பலத்தையும்  ஹதீஸ்களின் வழியாக எட்டிப்பார்த்தேன். முஹம்மது நபியின் மனைவியர்களைப் பற்றி நான் அறிந்து கொண்டவைகளில் சிலரைப்பற்றிய சுருக்கமான செய்திகள்.
முஹம்மது  நபியின் மனைவியர்கள்  பற்றிய செய்திகள்

1. கதீஜா

நபி (ஸல்) அவர்களின் முதல் மனைவி. அவர் அந்த சமுதாயத்தில் நல்ல செல்வாக்கும், செல்வச் செழிப்பும்  உடைய ஒரு பெண்மணி. இன்றைய மதிப்பில் சுமார் 800 கோடி அமெரிக்க டாலர் மதிப்புடைய சொத்திற்கு அதிபதியாக இருந்தார் என்று ஃபாத்திமா (ரலி) வாழ்வில் நடந்த படிப்பினை சம்பவங்கள்  (பாகம்-1) என்ற நூலில் பன்னூலாசிரியர் மௌலானா மௌலவி S.S.முஹம்மது ஷைகு அப்துல்லாஹ் மன்பயீ காதிரி என்ற அறிஞர் கூறுகின்றார். (இந்திய மதிப்பின்படி சுமார் 36,800 கோடி ரூபாய் நம்ப முடிகிறதா? ) கதீஜா  அவர்களது  உறவினர் குழைமா என்ற பெண், வேலை தேடிக் கொண்டிருந்த நபி (ஸல்) அவர்களை, இவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்நபி (ஸல்) பரம ஏழையான ஒரு இளைஞர். நபி (ஸல்) அவர்களின் அழகினால் கதீஜா கவரப்பட்டார். திருமண பேச்சை முதலில் துவங்கியவரும் இவரே. இவர் ஏற்கெனவே இருமுறை விதவையானவர் முந்தைய கணவர்களுக்குப் பிறந்த மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். தன்னைவிட பதினைந்துவயது இளையவரான நபி (ஸல்)  மீது மையல் கொண்டார். தன்னுடைய நாற்பதாம் வயதில் இருபத்தி ஐந்து வயதான நபி (ஸல்) அவர்களை, சில எதிர்ப்புகளை மீறி மூன்றாவதாக திருமணம் செய்தார். பொருளாதார நெருக்கடியிலிருந்த நபி (ஸல்)  இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.
தன்னை மணந்து கொள்ளுமாறு முஹம்மதிற்கு செய்தியை அனுப்பிவிட்டு, அதே சமயத்தில் தனது தந்தையார் குவைலித்-தை வீட்டிற்கு வரவழைத்து, வேண்டிய அளவிற்கு மதுவைப் பருகவைத்து, நல்ல அங்கியை அணிவித்து, வாசனை திரவயங்கள் தடவி உட்கார வைத்தார். ஒரு மாட்டை அறுத்து விருந்திற்கு ஏற்பாடுகளைச் செய்து, முஹம்மதின் பெரிய தகப்பனார்களுக்கும் அழைப்பு கொடுத்தார். அவர்கள் வந்த பிறகு, குடிபோதையிலிருந்த கதீஜாவின் தகப்பனார் குவைலித் (என்ன நிகழ்கிறதென்றே தெரியாமல்), கதீஜாவை முஹம்மதிற்கு திருமணம் செய்து வைத்தார். போதை நீங்கியதும் அவர் கேட்ட முதல் கேள்வி,  “இந்த மாட்டிறைச்சி, வாசனை திரவயங்கள் கோடுபோட்ட புதிய அங்கி இவைகள் இங்கு வந்ததெப்படி?” என்றார். அதற்கு கதீஜா, “நீங்கள் தானே என்னை முஹம்மது பின் அப்துல்லாவிற்கு திருமணம் முடித்து  வைத்தீர்களே  தெரியவில்லையா?” என்றார்.
"நான் அப்படி ஒன்றும் செய்யவில்லை, செய்யவும் மாட்டேன். மெக்காவிலேயே சிறந்த ஆண்கள் இருக்கையில், வேறொருவருக்கு மணம் முடித்து வைக்க என்னால் முடியாது. என் அருமை மகளை முஹம்மதுவைப் போன்ற ஊர்சுற்றி, வெறும் பயலுக்கு எப்படி மணம் செய்து வைத்திருக்க முடியும்?” என்றார்.
முஹம்மதின் பெரிய தகப்பன்மார்கள் கோபமடைந்து, இந்த  உறவை ஏற்படுத்தியதே உங்கள் மகள் கதீஜாதான் என்றனர். கதீஜாவின் தந்தை வாளை உறுவினார். இருதரப்பும் சண்டைக்குத் தயாரானார்கள் . நிலைமை வீபரீதமாவதை உணர்ந்த கதீஜா நடந்தவைகளைக் கூறி தன்னுடைய திட்டத்தை ஒப்புக் கொண்டவுடன், அவரது தப்பனாரால் எதுவும் பேச முடியாமல் போனது. பின், இருதரப்பும் சமாதான பேச்சுவார்த்தைகளைத் துவங்கின. (Persian Tabari, Volume-3, Page 832)
 இவர்களின் திருமணம் கிபி 595 ல் நிகழ்ந்தது. கதீஜா அம்மையாரின் பெரும் செல்வமும் முஹம்மது நபியின் நிர்வாகத்தின் கீழ்வந்தது. கதீஜா அம்மையாரின் வயது ஏறக்குறைய நபி (ஸல்) அவர்களின் தாய்க்கு சமமான வயது.  இவர்களுக்கு காசிம், தைய்யிப், தாஹிர் என்ற ஆண்  குழந்தைகளும், ஜைனப், ருக்கையா, உம்மு குல்தும் மற்றும் ஃபாத்திமா என்ற பெண் குழந்தைகளும் இருந்தனர், ஆண் மக்கள்  குழந்தைப் பருவத்திலேயே  இறந்ததால் நான்கு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தனர்பெரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர் கதீஜா அவர்களுடனான திருமண வாழ்க்கையில்  முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பெரும்பாலும் தனிமையை நாடி ஹீரா குகையில் இருப்பதையே விரும்பினார்.
குடும்பத்தையும்கதீஜா அவர்கள் திறம்பட நிர்வகித்து வந்த வியாபாரத்தையும் முஹம்மது நபி (ஸல்) சரியாக கவனிக்கவில்லை. அவர் தனது குடும்பத்திற்காக எவ்விதமான வியாபாரத்திலோ அல்லது  தொழிலிலும் ஈடுபடவில்லை. குழந்தைகளையும், பொறுப்பின்றி இருக்கும் கணவனையும் வியாபாரத்தையும் ஒருசேர கதீஜாவால் கவனிக்க முடியவில்லை. இதன் காரணத்தால் கதீஜாவின் வியாபரம் நொடிந்து, சுமார் 36,800கோடி ரூபாய் மதிப்புடைய செல்வங்கள் அனைத்தும் கரைந்து குடும்பம் தரித்திர நிலையைடைந்தது. இவ்வளவு செல்வத்தையும் ஒன்றுமில்லாமல் செய்தது முஹம்மது நபியின் மகத்தான சாதனை என்றுதான் சொல்ல வேண்டும்.
இறுதிக் காலத்தில் அணிவதற்குக் கூட நல்ல ஆடைகளின்றி, மிகவும் வறுமையில் வாழ‍ந்தாகவும் ஹதீஸ்கள் கூறுகிறது. இன்றைய நிலவரப்படி இந்திய மதிப்பில் சுமார் 264,000 கோடி ருபாய்களை  இஸ்லாமின் வளர்ச்சிக்காக செலவு செய்துள்ளார் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். பதிமுன்று ஆண்டுகள் பிரச்சாரத்தில், 264,000 கோடி  செலவு செய்தும் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் என்பதிற்கும் குறைவான அவர்களையே இஸ்லாமில் இணைக்க முடிந்துள்ளது.
இஸ்லாமிய வரலாற்றில் நிறைந்திருக்கும் முரண்பாடுகளுக்கு இதுவும் ஒரு உதாரணம். அன்றைய மெக்கா நகரத்தில் ஆயிரம் குடும்பங்கள் இருந்ததாகக் கொண்டாலும் முஹம்மது நபி தனது பிரச்சாரத்திற்காக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 264 கோடி ரூபாய்களை செலவு செய்ததாகவே பொருள் தருகிறது. ஒரு கோடி ரூபாய் என்பது இன்றைய காலத்திலும் மிகப்பெரிய செல்வம்தான் அப்படியானால், ஆயிரக் கணக்கானவர்கள் மிகப்பெரும் செல்வத்தில் திளைத்திருக்க வேண்டும், பெரும் பணக்காரர்கள் நிறைந்த நகரமாக மெக்கா மாறியிருக்க வேண்டுமே? இப்படியொரு மாற்றம் நிகழ்ந்ததா? உங்களால் இந்தச் செய்தியை நம்பமுடிகிறதா?
 கதீஜா கிபி 619 அல்லது 623-ல் மரணமடைந்தார் குறிப்பிடப்படுகிறது. கதீஜா அவர்களின் மரணத்திற்கு பிறகு ஒரு சில மாதங்கள்  தனிமையில் வாழ்ந்தார்.HYPERLINK  \l "Safiya"
நபி (ஸல்) அவர்களுக்கு, நாற்பது ஆண்களுக்கு சமமான பாலியல் பலம் கதீஜா அம்மையாரின் மரணத்திற்கு பிறகே வழங்கப்பட்டிருக்க வேண்டும் ஏனென்றால், கதீஜா  அவர்கள் உயிருடன் இருந்தவரை வேறு எந்த பெண்ணையும் அவர் நாடிச் சென்றதாக ஆதாரங்கள் எதுவுமில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


தொடர் 5

2. சவ்தா

சவ்தா அவர்களை  திருமணம் செய்வதற்கு முன்பே ஆயிஷாவைத் திருமணம் செய்ததாக ஹதீஸ்களில் காணலாம். சவ்தா அவர்களும்இவரது கணவர் நபி (ஸல்) ஏற்று முஸ்லீமாக வாழ்ந்து வந்தனர் பாதுகாப்பு காரணமாக அபிஸீனியா சென்ற இவரது கணவர் கிருஸ்த்துவராக மதம் மாறி அங்கேயே இறந்தார்கணவனை இழந்து விதவையாக இருந்த  சவ்தா அவர்களைதன்னுடைய பெண் குழந்தைகளைப் பராமரிக்கவும் தாம்பத்தியத் தேவைகளுக்காக திருமணம் செய்தார். சவ்தா கருமையான நிறம் கொண்டவர், திடகாத்தரமான உடல்வாகு உடையவர்பருமனான உடல்வாகு  காரணமாக மிக மெதுவாக செயல்படும் இயல்புடையவராக இருந்தார். இதன் காரணமாக நபி (ஸல்) அவர்களின் மற்ற இளம் மனைவிகளுடன் தன்னால் போட்டியிட முடியவில்லை என்பதால் மன வருத்தமடைந்திருந்தார். ஆயிஷா, இவரது பெருத்த உடல்அமைப்பை கேலி பேசிதாகவும் ஹதீஸ்களில் காணலாம்.
புஹாரி ஹதீஸ் -5212
ஆயிஷா  (ரலி) அவர்கள் கூறியதாவது.

(நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் தங்கும் நாளை எனக்கு அன்பளிப்பாக(விட்டு)க் கொடுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் என்னுடைய நாளையும், சவ்தா  அவர்களின் நாளையும் எனக்கே ஒதுக்கி வந்தார்கள்.

தனக்கு துணையாக தன் கணவர் முஹம்மது நபி செலவிடும் அந்த ஒரு நாளையும் ஏன் ஸவ்தா ஆயிஷாவிற்கு விட்டுக்கொடுக்க வேண்டும்?

இதற்கான பதிலை நாம் குர்‍ஆன் 4:128 வசனத்திற்கான விரிவுரைகளில் காணலாம்:

ஒரு பெண் தன் கணவனிடமிருந்து வெறுப்பையோ அல்லது புறக்கணிப்பையோ பயந்தால் அப்பொழுது அவ்விருவரும் தங்களிருவருக்கிடையே ஏதேனும் ஒரு சமாதனத்தை உண்டாக்கிக்  கொள்வது அவ்வருவரின் மீதும்  குற்றமில்லை
(குர்ஆன் 4:128)

குர்‍ஆன் 4:128-ம் வசனத்திற்கு இபின் கதீர் கீழ்கண்ட விளக்கவுரையைத் தருகிறார்:

    "தன் கணவர் தன்னை வெறுத்துவிடுவாரோ, அல்லது புறக்கணித்துவிடுவாரோ என்று ஒரு பெண் பயந்தால், அவள் தன்னுடைய எல்லா உரிமைகளையும் அல்லது ஒரு சில உரிமைகளையும் விட்டுக்கொடுக்கலாம், அதாவது கணவரிடமிருந்து எதிர்ப்பார்க்கும் பொருளாதார உரிமைகள், உடுக்க உடை அல்லது இருக்க வீடு போன்ற உரிமைகளை விட்டுக்கொடுக்கலாம், அப்போது அக்கணவர் தன் மனைவியிடமிருந்து வரும் இந்த உரிமைகள் விட்டுக்கொடுத்தலை அங்கீகரித்துக் கொள்ளலாம். த‌ன் உரிமைக‌ளை விட்டுக்கொடுப்பது மனைவியின் தவறில்லை‌, அதே போல‌, த‌ன் ம‌னைவியின் உரிமை விட்டுக்கொடுத்த‌லை அங்கீகரிப்பதும் அந்த‌ க‌ண‌வ‌னின் த‌வ‌று அல்ல‌. இதைத் தான் இறைவ‌ன் கூறுகின்றான்: "அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொண்டால் அவ்விருவர் மீது குற்றமில்லை. அத்தகைய சமாதானமே மேலானது". இத‌ன்ப‌டித் தான், ஸவ்தா வ‌ய‌து சென்ற கிழ‌வியாக‌ மாறின‌ போது, இறைத்தூத‌ராகிய‌ முஹ‌ம்ம‌து அவ‌ளை விவாக‌ர‌த்து செய்ய‌ முடிவு செய்தார். இதனால், ஸவ்தா முஹம்மதுவிடம் இப்படி விவாகரத்து செய்யாமல் இருப்பதற்காக, தன்னிடம் அவர் செலவிடும் நாளை ஆயிஷாவிற்கு விட்டுக்கொடுப்பதாகச் சொல்லி முஹம்மது நபியிடம் வேண்டிக் கொண்டார். இதனால், முஹம்மது நபி (ஸல்) ஸவ்தாவின் உரிமை விட்டுக் கொடுப்பதற்கு பதிலாக, ஸவ்தாவை விவாகரத்து செய்யவில்லை.

    "...இபின் அப்பாஸ் அதிகார பூர்வமாக கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் தன்னை விவாகரத்து செய்துவிடுவாரோ என்று ஸவ்தா பயந்தார். ஆகையால், அவரிடம் ஸவ்தா கூறினார்: அல்லாஹ்வின் தூதரே, என்னை நீங்கள் விவாகரத்து செய்து விடாதீர்கள். அதற்கு பதிலாக என் நாள் ஆயிஷாவின் நாளாக மாறட்டும். ஆகையால், முஹம்மது நபி (ஸல்) அவர்களும் அப்படியே செய்தார், குர்ஆன் 4:128ம் வசனம் வெளிப்பட்டது.
ஏன் அல்லாஹ்வின் தூதர் ஸவ்தாவை விவாகரத்து செய்ய விரும்பினார்?

ஸவ்தாவை முஹம்மது நபி (ஸல்)  விவாகரத்து செய்ய விரும்பவில்லை என்றுச் சொன்னால், ஏன் ஸவ்தா தன்னை அவர் விவாகரத்து செய்து விடுவார் என்று பயப்படவேண்டும்?

தன்னிடம் தன் கணவர் முஹம்மது நபி  செலவிடும் அந்த ஒரு நாளையும் ஏன் ஆயிஷாவிற்கு ஸவ்தா விட்டுக்கொடுக்கவேண்டும்?
ஸவ்தா செய்த பிழை தான் என்ன?

இபின் கதீர் அவர்களின் விரிவுரையின் படி, ஸவ்தாவின் எந்த பிழையும் இதற்கு காரணமல்ல, இதற்கு ஒரே காரணம் ஸவ்தா வயது சென்றவராக மாறியது தான், அதாவது அவருக்கு வயது கூடிக்கொண்டே சென்றது தான்.
இன்னும் ஒரு சில அறிவிப்புக்கள் உண்மையாகவே முஹம்மது நபி (ஸல்), ஸவ்தாவை விவாகரத்து செய்துவிட்டார் என்று கூறுகிறது, அதன் பிறகு ஸவ்தா அவரிடம் பேசி, தன் உரிமைகளை விட்டுக் கொடுப்பதாக சொன்ன போது, முஹம்மது நபி (ஸல்) அதனை அங்கீகரித்தார்.
“Barra narrated that the prophet sent message to Sauda that I have divorced you. When Sauda heard the news, she went and sat in the way of the Prophet to Aisha’s house. When she saw the prophet she told him. I swear thee by the one who has sent you the Quran and has exalted you over all the creation to tell my why did you divorce me. Have I done something wrong that has offended you? The Prophet said no! Sauda said, I then beg you for the sake of the same God to not divorce me. I am getting old I don’t need to be with a man. You can use my turn to stay with Aisha, but I wish that in the day of resurrection to be counted amongst your wives. The Prophet agreed and Sauda said that since then the Prophet spent the nights there were her turn with his favorite wife Aisha.” [Tabaqat V. 8 p. 53-54 Persian translation]
(பாரா அறிவிப்பதாவது, அல்லாஹ்வின் தூதர் சவ்தாவிற்கு, அவரை விவாகரத்து செய்திருப்பதாக ஒரு செய்தியை அனுப்பினார். செய்தியை கேள்விப்பட்ட சவ்தா அல்லாஹ்வின் தூதர் ஆயிஷாவின் வீட்டிற்கு செல்வதற்காக அவ்வழியாக வருவார் என்று ஸவ்தா காத்திருந்தார். முஹம்மது அவ்வழியே வருவதை ஸவ்தா கண்டவுடன், அவரிடம் சென்று "உலக உயிர்களிலெல்லாம் உம்மை மேன்மைப்படுத்தியவனும், தன் வார்த்தைகளை உமக்கு வெளிப்படுத்தும் இறைவனின் பெயரில் உம்மிடம் வேண்டிக்கொள்கிறேன். ஏன் என்னை விவாகரத்து செய்தீர்கள்? நான், உங்களுக்குத் தீங்கு ஏற்படுத்தும் முறையில்  தவறு ஏதேனும் செய்து விட்டேனா? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் இல்லையென்றார். ஸவ்தா கூறினார், இறைவனின் பெயரால் கெஞ்சி கேட்கிறேன் என்னை விவாகரத்து செய்து விடாதீர்கள், நான் வயது சென்றவளாக இருக்கிறேன், எனக்கு ஆணின் துணை தேவையில்லை. என் (வீட்டிற்கு வரும்) முறையை நீங்கள் ஆயிஷாவுடன் தங்கிக் கொள்ளலாம். ஆனால், கடைசி நாளில் உயிர்த்தெழும் போது உம்முடைய மனைவிமார்களின் கூட்டத்தில் நானும் உயிர்த்தெழ வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறினார். ஆகையால் அல்லாஹ்வின் தூதர் (ஸவ்தாவின் கோரிக்கையை) ஏற்றுக் கொண்டார்.  ஸவ்தா கூறினார்: “அதிலிருந்து,  அல்லாஹ்வின் தூதர் தன்னுடன் தங்க வேண்டிய  இரவுகளை அவருக்கு  விருப்பமான மனைவியான ஆயிஷாவுடன் கழித்தார்")
முஹம்மது நபி (ஸல்)  விவாகரத்து செய்யவில்லை, ஆனால், செய்ய வேண்டுமென்று விரும்பினார் என்று சிலர் கூறுகிறார்கள். விஷயம் எதுவானாலும், ஸவ்தா தன் உரிமையை ஆயிஷாவிற்கு விட்டுக் கொடுத்தார் என்பது மட்டும் மறுக்கமுடியாத உண்மை.
தனக்கு இருக்கும் ஒரே கணவனின் நாளையும், அதற்கான தன் உரிமையையும் ஏன் ஒரு பெண் வேறு ஒரு பெண்ணிற்கு விட்டுக் கொடுக்கிறாள்?
நிக‌ழ்ச்சியின் முழு விவ‌ர‌மும் தெரிந்து கொள்ள, இன்னுமுள்ள‌ குர்‍ஆன் விரிவுரையாள‌ர்க‌ள் குர்‍ஆன் 4:128ம் வசனத்தைப் பற்றி என்ன‌ சொல்கிறார்க‌ள் என்பதை காண்போம்.
குர்‍ஆன் 4:128 பற்றி ரஜி (Razi) கூறுகிறார்:
            சிலர் கூறுகிறார்கள் "பயப்பட்டாள்" என்றுச் சொன்னால், அதன் பொருள் "அறிந்துக்கொண்டாள்" என்பதாகும். இன்னும் சிலர் கூறுகிறார்கள் "பயப்பட்டாள்" என்றுச் சொன்னால், அதன் பொருள் "நினைத்தாள்" என்பதாகும். ஆனால், இப்படி பொருள் கூறுகிறவர்கள், மிகவும் தெளிவாக புரியக்கூடிய ஒன்றை கவனிக்காமல் அறியாமையில் இருக்கிறார்கள். பயம் என்றால் என்ன பொருள் என்று கேட்டால், பயம் என்றால் பயம் என்று தான் பொருள், அவ்வளவு தான். பயம் எப்போது வருகிறது, அந்த பயம் உருவாவதற்கான காரண காரணிகள் அல்லது நிகழ்வுகள் நடைப்பெறக்கூடிய சூழ்நிலைகள் தெரியும் போது பயம் வருகிறது. இந்த சூழ்நிலைகள் என்ன? உதாரணத்திற்கு ஒரு ஆண் தன் மனைவியைக் கண்டு, உனக்கு வயதாகிவிட்டது, நீ அசிங்கமாக இருக்கிறாய். நான் ஒரு நல்ல அழகும் இளமையும் கொண்ட வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என்றுச் சொல்லும் போதுதான் மனைவிக்கு பயம் வருகிறது. ஒரு கணவன் தன் மனைவியை வெறுத்துவிடுவது போல, புறக்கணித்துவிடுவது போல காட்டிக் கொள்ள என்ன செய்வான்? அவன் அவளின் முகத்தில் கோபமாக பார்ப்பான், அவளுக்கு தேவையான தாம்பத்ய உறவினை துண்டித்துக் கொள்வான். அவளை கேவலமாக நடத்துவான். இப்படிச் செய்து தன் வெறுப்பை காண்பிப்பான்.

ரஜி அவர்கள் விரிவுரை கூறியது போல, முஹம்மது நபி (ஸல்) அவர்களும், ஸவ்தாவிற்கு செய்து இருப்பாரோ? ரஜி சொல்வது போன்ற சில காரணங்களை கண்டிப்பாக ஸவ்தா கண்டு இருக்கவேண்டும், இதனால் தான் ஸவ்தா முஹம்மது நபி (ஸல்) அவர்களிடமிருந்து விவாகரத்து பெறாமல் இருப்பதற்கு எது சரியான வழி என்று சிந்தித்து, கடைசியாக தன் உரிமையை விட்டுக்கொடுத்து இருக்கக்கூடும்…. தொடரும்

தொடர். 6

ஸவ்தா ப‌ற்றி இபின் க‌தீர் மேலும் கூறும் போது:
            "குர்‍ஆன் வ்ச‌ன‌ம் 4:128 பற்றி மேலதிக விவரங்கள், "ஆயிஷா கூறினார்: இரு மனைவிகள் உள்ள கணவனை பற்றி இது குறிக்கும். இவ்விரு மனைவிகளில் ஒரு மனைவி வயது சென்றவளாகவும், அல்லது அழகில்லாமலும் இருந்தால், இந்த மனைவியின் துணையை, அந்த கணவன் விரும்பவில்லையானால், அவளோடு வாழ அவனுக்கு விருப்பமில்லையானால், அவள் அவனிடம்" என்னை விவாகரத்து செய்ய வேண்டாம், இதற்கு பதிலாக எனக்கு நீங்கள் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் செய்ய வேண்டியதில்லை" என்று நான் என் உரிமைகளை விட்டுக் கொடுக்கிறேன் என்றுச் சொல்லலாம்.
            இந்த வசனம் சொல்ல வருவது என்ன? அவள் தன் உரிமைகளில் சிலவற்றை விட்டுக்கொடுக்கிறேன் என்றுச் சொன்னால், அந்த நிபந்தனையினால் விவாகரத்து செய்துக்கொண்டு பிரிவதை விட இருவரும் சமாதானம் அடையலாம் என்று இந்த வசனம் கூறுகிறது. இதன்படித் தான் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் ஸவ்தாவை விவாகரத்து செய்யாமல் தன் மனைவிகள் என்ற எண்ணிக்கையில் ஸவ்தாவையும் இருக்கச் செய்தார். இதற்காக‌ ஸவ்தா தன் உரிமையை ஆயிஷாவிற்கு விட்டுக் கொடுத்தார்கள். ஆக, இஸ்லாமியர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் இந்த முன்மாதிரிகளின் படி செய்யலாம், ஏனென்றால், முஹம்மது நபி (ஸல்)  இதனை செய்துள்ளதால், இது இஸ்லாமிய சட்டபூர்வமானதும், அனுமதிக்கப்பட்டதுமாக இருக்கிறது.
இந்த செய்தியைப் பற்றி சிறந்த இஸ்லாமிய அறிஞர இபின் அல் அரபி (Ibn al-’Arabi) கூறும் போது:
".. ஸவ்தா  வயதானவராக மாறினபோது, அல்லாஹ்வின் தூதர் அவரை விவாகரத்து செய்ய விரும்பினார். இருந்தபோதிலும், ஸவ்தா முஹம்மது நபி (ஸல்) அவர்களின்  மனைவிமார்களில் ஒருவராக இருக்கவே விரும்பினார். ஆகையால், ஸவ்தா "என்னை விவாகரத்து செய்யவேண்டாம், என் நாள் ஆயிஷாவின் நாளாக இருக்க நான் விட்டுக்கொடுக்கிறேன்" என்றார். அதே போல, முஹம்மது நபி (ஸல்) அவர்களும் ஸவ்தாவை விவாகரத்து செய்யவில்லை. ஆக, ஸவ்தா இறக்கும் போது முஹம்மது நபி (ஸல்) அவர்களின்  மனைவிகளில் ஒருவராகவே மரணமடைந்தார்கள்.
இபின் அபி மாலிக் கூறும் போது: இந்த‌ வ‌ச‌ன‌ம் ஆயிஷாவிற்காக‌ இற‌க்க‌ப்ப‌ட்ட‌து, ஒரு ம‌னித‌ன் ஒரு இள‌ம் பெண்ணை திரும‌ண‌ம் செய்துக்கொண்டு, பிற‌கு அவ‌ளுக்கு வ‌ய‌து அதிமான போது, அவளை விவாகரத்து செய்து அவளுக்கு பதிலாக வேறு ஒரு திருமணம் செய்துக்கொள்ளக்கூடாது என்றுச் சொல்லும் சில முட்டாள்களுக்கு இந்த வசனம் வெளிச்சம் தருகிறது. இப்படிப்பட்ட குழப்பத்திலிருந்து விடுதலையாக அல்லாஹ் இறக்கிய இவ்வசனத்திற்காக நான் அல்லாஹ்வை புகழுகிறேன்.]
ஆக‌, முஸ்லீம்கள் அறியாமையினால் முஹம்ம‌து நபி (ஸல்) அவர்களை கண்மூடித்த‌ன‌மாக‌ பின்ப‌ற்றின‌ர் ம‌ற்றும் அதே நேர‌த்தில் இத‌ற்காக‌ அல்லாஹ்வை புக‌ழ்வ‌தையும் ம‌றக்க‌வில்லை.
            டாக்ட‌ர் பின்த் அஷ் ஷாதி (Dr bint ash-Shati’) என்ப‌வ‌ர், இவ‌ர் "இறைத்தூத‌ரின் ம‌னைவிகள் (The Wives of the Prophet [nisaa’ an-Nabi] )" என்ற‌ புத்த‌க‌த்தை எழுதிய‌வ‌ர். இவ‌ர் த‌ன் புத்த‌க‌த்தில் "ஸவ்தா பார்ப்ப‌த‌ற்கு அழ‌கில்லாத‌வ‌ராக‌ இருப்பார் ம‌ற்றும் ப‌ரும‌னாக‌ இருப்பார்" என்று கூறுகிறார் ]. (புகாரி கூறுகிறார், ஸவ்தா உய‌ரமாக‌ இருப்பார், ப‌ரும‌னாக‌ இருப்பார் ம‌ற்றும் நிதான‌மாக‌ வேலை செய்வார்)
டாக்ட‌ர் பின்த் அஷ் ஷாதி, முஹம்மது மற்றும் ஸவ்தாவின் திருமண பந்த உறவு பற்றி கீழ் கண்டவாறு கூறுகிறார்:
            ஸவ்தா தன் அனுபவத்திலிருந்து உணர்ந்து கொண்டது என்னவென்றால், தனக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உள்ளத்திற்கும் இடையில் மிகப்பெரிய தடை அல்லது பிளவு உள்ளது என்பதை உணர்ந்தார். தனக்கு தரப்பட்டிருக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களோடு தங்கும் அந்த ஒரு நாள், தனக்கு அன்பினால் மன ஒருமைப்பாட்டினால் கொடுக்கப்பட்டது அல்ல, அது இரக்கத்தின் அடிப்படையில் தரப்பட்டது என்பதை சந்தேகத்திற்கு சிறிதும் இடமின்றி ஸவ்தா புரிந்துக்கொண்டார்.
இருவருக்கும் இடையே அன்பும், ஒற்றுமையும் இல்லையானால், ஏன் முஹம்மது ஸவ்தாவை முதன் முதலிலேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
மேலும், அன்பும், ஒற்றுமையும் எங்கு இல்லையோ, அங்கே இரக்கம் எப்படி வரும்?
டாக்ட‌ர் பின்ட் அஷ் ஷாதி கூறுகிறார்: ஹோலா பின்ட் ஹ‌கீம் (Khola bint Hakim) தான் ஸவ்தாவை முஹ‌ம்ம‌து திரும‌ண‌ம் செய்து கொள்ள‌ வேண்டும் என்று அறிவுரை கூறினாராம். அந்த‌ நேர‌த்தில் ஆயிஷா 6 வ‌யதுடைய‌வ‌ராக‌ இருந்தாராம். கோலாவிடம் முஹ‌ம‌ம்து "யார் என்னுடைய‌ வீட்டை பார்த்துக் கொள்வார்க‌ள், யார் இறைத் தூத‌ருடைய‌ ம‌க‌ள்க‌ளை க‌வ‌னித்துக் கொள்வார்க‌ள்" என்று கேட்டாராம். அத‌ற்கு ஹோலா "ஸவ்தாவை திரும‌ண‌ம் செய்துக்கொள்ளும்" என்றுச் சொன்னார்கள், இத‌ற்கு ந‌பி அங்கீக‌ரித்தார். ம‌ற்றும் ஸவ்தா முஹ‌ம்ம‌து நபி (ஸல்) அவர்களின் வீட்டை க‌வ‌னித்துக்கொள்ளவும், அவ‌ருடைய‌ ம‌க‌ள்க‌ளை பார்த்துக்கொள்ள‌வும் மிக‌வும் விருப்ப‌முடைய‌வ‌ராக‌ இருந்தார்க‌ள்.
இப்போது நமக்கு காட்சி மிகவும் தெளிவாகத் தெரிகிறது. அதாவது ஆயிஷா முஹம்மது நபி (ஸல்) அவர்களின்  காதலாக மாறினார், ஸவ்தா முஹம்மது நபி (ஸல்) அவர்களின்  மகள்களை கவனிக்கும் வேலைக்கார ஆயாவாக‌ மாறினார்.
முஹம்மது நபி (ஸல்) அவர்களின்  முதல் மனைவி கதீஜா இறந்த பிறகு அவரின் வேதனையான‌ நேரத்தில் ஆதரவு அளித்து அவரைத் தேற்றி, இத்தனை ஆண்டுகள் அவரின் பிள்ளைகளை கவனித்து, சமைத்துப்போட்டு, துணிகளை துவைத்துப் போட்டு, எல்லாருக்கும் தேவையானதைச் செய்த ஸவ்தாவை இப்போது முஹம்மதுவிற்கு பிடிக்கவில்லை, அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தார். அவரது விவாகரத்திற்கு வேறு எந்த ஒரு காரணமும் இல்லை, இருக்கும் ஒரே காரணம், ஸவ்தா கிழவியாகி விட்டார், அவரிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச அழகும் இப்போது இல்லையென்பதுதான் குற்றச்சாட்டு.
குர்‍ஆன் கீழே உள்ள வசனத்தில் தம்பதிகளாக இருக்கும் கணவன் மனைவியின் மத்தியில் இருக்கும் அன்பு குறித்து அழகாக பேசுகின்றது.
இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
(குர்ஆன் 30:21)
           குர்‍ஆன் சொல்லும் அந்த‌ அன்பு ம‌ற்றும் உவ‌ப்பு எப்ப‌டிப்ப‌ட்ட‌தாக‌ இருக்கிற‌து? அதில் உள்ள குறைபாடு என்ன என்ப‌தை இதுவரை நாம் க‌ண்ட‌ நிக‌ழ்ச்சி மூல‌ம் அறிந்து கொள்ள‌லாம்.
குர்‍ஆன் சொல்லும் அன்பு, இர‌க்க‌ம் போன்ற‌வைக‌ள் ஸவ்தாவிற்கு ந‌ட‌ந்த‌ நிக‌ழ்ச்சியில் காண‌ப்ப‌ட‌வில்லையே?
இஸ்லாமிய‌ ச‌ட்ட‌ நூல்களை எழுதிய ஆசிரியர் கீழ் கண்டவாறு எழுதுகிறார்:
வெறும் காமம், மோகத்தை மட்டுமே முக்கியம் என்று கருதி இருக்கும், நல்ல நடத்தை இல்லாத ஒரு மனிதன், இஸ்லாம் அங்கீகரிக்காததை செய்து, தன் மனைவியை எந்த ஒரு காரணமும் இல்லாமல் விவாகரத்து செய்தால் அவனுக்கு கொடுக்கப்படும் தண்டனை என்ன? இதற்கான பதில்: இப்படிப்பட்ட மனிதனை அல்லாஹ் தண்டிப்பான், இந்த உலகத்திலும், வரவிருக்கும் அந்த உலகத்திலும், அல்லாஹ் அவனை பழிவாங்குவான்.
மேலே சொன்ன வரிகள் மிகவும் அழகாகவும் நியாயமானதாகவும் தென்படுகின்றது, எதுவரைக்கும்? அதே ஆசிரியர் அதே புத்தகத்தில் சில பக்கங்களுக்கு பிறகு என்ன சொல்லியுள்ளார் என்று நாம் படிப்பதற்கு முன்பாக மட்டுமே இவ்வரிகள் அழகாகத் தெரியும். அதே ஆசிரியர் எழுதுவதை படியுங்கள்: "எப்போது ஒரு பெண் தன் கணவனின் காமத்திற்கு மோகத்திற்கு உபயோகமில்லாதவளாக மாறுகிறாளோ, அவளிடம் இருக்கும் சில சரீர குறைபாடுகளினாலோ, அல்லது முதுமையினாலோ (வயது அதிமாகிவிட்டாளோ) அல்லது இப்படிப்பட்ட காரணங்களினால், ஒரு மனிதன் விவாகரத்து செய்ய அனுமதிக்கப்படுகின்றான்" .
ஒருவன் தன் மனைவி முதுமை அடைந்து விட்டாள் என்பதால் அவளை விவாகரத்து செய்ய அனுமதிக்கப்படுகிறார். இதற்கு மிகவும் பொருத்தமான எடுத்துக்காட்டாக முஹம்மது நபி (ஸல்) வர்ணிக்கப்படுகிறார். முஹம்மது நபி (ஸல்) ஒரு பின்பற்றத்தக்க உதாரண மனிதராக  இருப்பதாக குர்‍ஆனிலே அல்லாஹ் புகழ்ந்துகூறுகிறான்.
நிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தின் மீது இருக்கின்றீர்
(குர்ஆன் 68:4)
சரி, நபி வெறுப்படைந்ததைப் போன்று ஸவ்தா  தள்ளாத வயதுடைய மூதாட்டியா?



தொடர் 7
                கலீபா முவஆவியாவின் ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி 54 -ம் ஆண்டு இறந்ததாக  இப்ன் ஸாத் தபாக்கத் கூறுகிறதுஇறப்பின் பொழுது ஸவ்தா அவர்களுடைய வயதை சரியாக அறிய முடியவில்லைஹிஜ்ரத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக முஹம்மது நபிஸவ்தாவை திருமணம் செய்தார்.அதாவது3 + 54 = 57 ஆண்டுகள்  முஹம்மது நபியின் மனைவி என்ற தகுதியுடன் ஸவ்தா வாழ்ந்திருக்கிறார்ஸவ்தா 80 வயதில்  இறந்ததாக  கொண்டால்,  80 - 57 = 23, முஹம்மது நபிஸவ்தாவை திருமணம் செய்யும் பொழுது ஸவ்தாவிற்கு 23வயதாக இருந்திருக்கலாம்இதன் அடிப்படையில்  ஸ்வ்தாவை விட  முஹம்மது நபி27 வயது முதியவர்.
இந்தகணக்குகளின் அடிப்படையில் நோக்கினால் தன்னுடைய 63-ம் வயதில் முஹம்மது நபி இறக்கும் பொழுது ஸ்தாவிற்கு சுமார் 63 – 27 = 36  வயது  இருக்கலாம் 36 வயது ஸவ்தா கிழவியென்றால் 63 வயது முஹம்மது நபி இளைஞரா ?

3. ஆயிஷா

  ஹதீஸ்களிலிருந்து நமக்கு கிடைக்கும் தகவல்கள் ஆயிஷா அவர்களின் திருமண வயது ஆறுதாம்பத்திய வாழ்கை ஒன்பது வயதில்நபி (ஸல்) அவர்களுடன் வாழ்ந்தது ஒன்பது ஆண்டுகள் மட்டுமே (புகாரி 3894, 3896,5133,5134,5156,5158,5160).இவரைப் பற்றி விரிவாக பின்னர் காண்போம்.

 

          4. ஹப்ஸா

உமர் அவர்களின் மகள்கிபி 607 ல் பிறந்தார்இவரது தந்தை உமரின் கூற்றுப்படி இவர் அழகு குறைந்த பெண்மனியாக அறியப்படுகிறார்உஹது போரில் தன் கணவர் ஹூனைதை இழந்தார்உமர்விதவையான தன் மகளை மறுமணம் செய்து கொள்ள உத்மான் மற்றும் அபூபக்கர் சித்தீக் இருவரிடமும் வேண்டுகோள் வைக்ககிறார் ஆனால் அவர்களோ ஹப்ஸாவை நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்ய விரும்புவதை உணர்ந்து மறுப்பு  தெரிவிக்கின்றனர்.
புஹாரி ஹதீஸ் -4005
ப்துல்லாஹ் பின் உமர் (ரலிஅவர்கள் கூறியதாவது.
உமர் பின் கத்தாப் (ரலிஅவர்கள் (தம் மருமகன்குனைஸ் பின் ஹூதாஃபா (ரலி)அவர்கள் இறந்து விட்டதால் (மகள்ஹப்ஸா விதவையானபோது (அவர்களை வேறொருவருக்கு திருமணம் முடித்து வைக்க எண்ணினார்கள்குனைஸ் பின் ஹூதாஃபா (ரலிஅவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்களின் தோழர்களில் ஒருவரும்பத்ரு போரில் கலந்து கொண்டவருமாயிருந்தார்கள்மேலும் மதீனாவில் இறந்தார்கள்உமர் (ரலிஅவர்கள் கூறினார்கள்எனவே நான் உஸ்மான் பின் அஃப்பான் (ரலிஅவர்களைச் சந்தித்து  (என் மகள்ஹப்ஸாவைக் குறித்து எடுத்துக் கூறிநீங்கள் விரும்பினால்என் மகள் ஹப்ஸாவை உங்களுக்கத் திருமணம் செய்து வைக்கிறேன். (அதற்கு)  உஸ்மான்  (ரலிஅவர்கள்(உங்கள் மகளை நான் மணம் புரிந்து கொள்ளும்இந்த என் விஷயத்தில் நான் யோசிக்க வேண்டியுள்ளது என்று சொன்னார்சில நாட்கள் பொறுத்திருந்தேன்.பிறகு (நான் உஸ்மானை சந்தித்த போதுஇப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்றே எண்ணியுள்ளேன் என்று கூறினார்கள்ஆகவே நான் அபூபக்கர் அவர்களைச் சந்தித்தேன் (அவர்களிடம்நீங்கள் விரும்பினால்என் மகள் ஹஃப்ஸாவை உங்களுக்குத் திருமணம் முடித்து வைக்கிறேன் என்று கூறினேன்அபூபக்கர் அவர்கள் அமைதியாக இருந்தார்கள் எனக்கு அவர்கள் எந்த பதிலையும் கூறவில்லைஎனவே உஸ்மான்  அவர்களை விட அபூபக்கர் அவர்கள் மீதே மிகவும் மனவருத்தம் கொண்டவனாக  இருந்தேன்சில நாட்கள் பொறுத்திருந்தேன்பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் ஹஃப்ஸாவை பெண் கேட்டார்கள்எனவே  அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்களுக்கு  ஹஃப்ஸாவை திருமணம் செய்து வைத்தன்பிறகு (ஒரு நாள்அபூபக்கர் அவர்கள் என்னைச் சந்தித்த போது நீங்கள் என்னிடம் ஹஃப்ஸாவைக்  குறித்து சொன்ன போது நான் உங்களுக்கு பதில் எதுவும் கூறாததால் உங்களுக்கு என் மீது மனவருத்தம் இருக்கக் கூடும் என்று கூறினார்கள்நான் ஆம் என்று கூறினேன். (அதற்கு அபூபக்கர் அவர்கள்நீங்கள் கூறிய போது பதில் கூறாததற்குக் காரணம்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் ஹஃப்ஸா அவர்களை (தாம் மணம் புரிந்து கொள்வதுபற்றி பேசியதை நான் அறிந்திருந்தேன்அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களின் ரகசியத்தை நான் வெளிப்படுத்தவும் விரும்பவில்லை. (எனவேதான் உங்களுக்கு பதிலேதும் கூறவில்லை நபி (ஸல்அவர்கள் ஹஃப்ஸா அவர்களை(திருமணம் செய்யாமல்விட்டிருந்தால் உறுதியாக அவர்களை நான்(மனைவியாகஏற்றுக் கொண்டிருந்திருப்பேன் என்று கூறினார்கள்.

கிபி 625 நபி (ஸல்அவர்கள் ஐம்பத்தி ஆறாம் வயதில் ஹஃப்ஸாவைத் திருமணம்  செய்து கொண்டார்இத்திருமணம் அரசியல் காரணங்களுக்காவே நிகழ்ந்துள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்இதன் மூலம் வலிமையான உமரின் ஆதரவைத் தக்கவைத்துக் கொண்டார். ஆயிஷாவும் ஹஃப்ஸாவும் நெருங்கிய தோழிகள்தங்களது கருத்துக்களை நபி (ஸல்அவர்களுடன் விவாதிக்க தயங்காதவர்கள்ஒருமுறைகுடும்ப ரகசியம்(?)வெளியான விவகாரம் தொடர்பாக முஹம்மது நபியுடன் ஹப்ஸா செய்த  விவாதம் காரணமாக அவரை மணவிலக்கு செய்தார்அங்கு இறங்கிய ஜிப்ரீல் அவர்கள் ஹப்ஸாவை மணவிலக்கிலிருந்து  மீட்க கோருகிறார்நபி (ஸல்அவர்களும் அதை ஏற்று ஹப்ஸாவுடன் இணைந்து வாழ்ந்தார் (இதைப் பற்றி விரிவாக பின்னர் காண்போம்).   இவர் எட்டு ஆண்டுகள் நபி (ஸல்அவர்களுடன் வாழ்ந்தார்இவர் தன்னுடைய அறுபத்தது மூன்றாம் வயதில் காலமானார்.

5. ஜைனப் பின்த் குழைமா

ஹிஜ்ரி நாலாம் ஆண்டில்  இவரைத் தன்  ஐம்பத்தி ஆறாம் வயதில் திருமணம் செய்து கொண்டார்இவருடைய முதல் கணவர் பத்ரு போர் களத்தில் இறந்தவர்இவர் தானே முன்வந்து நபி (ஸல்அவர்களுக்காக தன்னை அர்பணித்ததார்.அனாதைகளிடமும் ஏழ்மையானவர்களிடமும் மிகுந்த அன்பு கொண்டவர்.  திருமணம் நிகழ்ந்து எட்டு மாதங்களில் மரணமடைந்தார்.

6. உம்முஸல்மா

ஹிஜ்ரி நாலாம் ஆண்டில்  இவரைத் தன்  ஐம்பத்தி ஆறாம் வயதில் திருமணம் செய்து கொண்டார்இவருடைய முதல்கணவர் அப்துல்லா பின் அப்துல் அஸத் உஹது போரில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக இறந்தவர்இத்தா காலத்திற்கு பிறகு அபூபக்கர் சித்தீக் மற்றும் உமர் இவர்களும் உம்முஸல்மாவை மறுமணம் செய்ய நாடுகின்றனர் ஆனால் மறுத்துவிடுகிறார்நபி (ஸல்அவர்களின் முயற்சி வெற்றியடைகிறது.  நபி(ஸல்அவர்கள்  உம்முஸல்மாவைத் திருமணம் செய்யும் வேளையில் இவருக்கு ஏழு வயதில் ஆண் குழந்தை இருந்ததாக காணப்படுகிறதுமிக அழகானவர்அறிவு கூர்மை நிறைந்தவர் என்பதால் சிக்கலான நேரங்களில் நபி (ஸல்அவர்கள் இவரது அறிவுரை நாடுவது வழக்கம்ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு இறந்தார்.

 

          7. ஜைனப் பின்த் ஜஹ்ஷ்

முஹம்மது நபி (ஸல்அவர்களின் மதீனா வாழ்க்கையில் ஹிஜ்ரி ஐந்தாம்ஆண்டுநபியவர்களின் ஐம்பத்து எட்டாம் வயதில்ஜஹ்ஷ் என்பவரின் மகள் ஸைனப் அவர்களை ஆறாவது மனைவியாக திருமணம் செய்தார்கள். இவரைப் பற்றியும் விரிவாக பின்னர் காண்போம்.

8. ஜுவேரியா

Bukhari vol 3, Book 46, No. 717
Narrated Ibn Aun:            

Prophet had suddenly attacked Banu Mustaliq without warning while they were heedless and their cattle were being watered at the places of water. Their fighting men were killed and their women and children were taken as captives; the Prophet got Juwairiya on that day.
பனூ முஸ்தலிக் இனத்தவர்களின் மீது  அவர்கள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் தாக்குதல் நடத்தி நபி (ஸல்அவர்களின் படை எளிதில் வெற்றி பெறுகிறதுஇப்போரில் பனூ முஸ்தலிக் இனத்தவர்கள் பலர் கொல்லப்பட்டனர்சுமார் 600 பேர் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்அவர்களனைவரும் அடிமைகளாக்கப்பட்டனர்சுமார் 2000ஒட்டகங்களும், 5000 கால்நடைகளும்ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டனஅக் கைதிகளில் ஜுவேரியா பனூ முஸ்தலிக் இன தலைவரின் மகளும் ஒருவர்பனூ முஸ்தலிக்போரில் இவருடைய கணவர் முஸாஃபி பின் ஸஃப்வான் நபி (ஸல்)அவர்களின் படையினரால் கொல்லப்பட்டுஜுவேரியா போர் கைதியாக பிடிக்கப்பட்டார்.போரில் கிடைத்த பொருட்களை (கைதிகள் உட்படதன்னுடைய படையினருக்கு நபி(ஸல்அவர்களால் பகிர்ந்தளிக்கப்படுகிறது.  ஜுவேரியாவைதாபித் பின் கைஸ் என்ற படைவீரருக்கு அடிமையாக பங்கீடு செய்யப்படுகிறார்தலைவரின் மகள் என்ற உயர்ந்த நிலையில் தன்னை ஒரு சாதாரண போர்வீரனின் அடிமையாக்கப்பட்டதை நினைத்து மிகுந்த வேதனையடைந்தார்.
தன்னுடைய நிலைமையை கூறிதாபித் பின் கைஸ்க்கு  பணயத்தொகை அளிப்பதன் மூலம் தன்னுடைய விடுதலையை நாடுகிறார்தன்னை பாதுகாப்பாக விடுதலை செய்ய நிறைய பிணைத்தொகை கேட்பார்கள் என அச்சமடைகிறார்தாபித் பின் கைஸும் கோரிக்கையை ஏற்கிறார்போரில் தங்களுடைய செல்வங்கள் முஸ்லீம்களின் வசமானதால்மற்றவர்களின் உதவியால் பணயத்தொகையை திரட்ட நினைக்கிறார்.
போரில் கிடைத்த அடிமைகள் மற்றும் இதர பொருட்களுடன் நபி (ஸல்)அவர்களின் படை மதீனா திரும்புகிறதுஇந் நிலையில் ஜுவேரியா தன்னை காப்பாற்றிக்கொள்ள நபி (ஸல்) அவர்களை சந்தித்தால் ஏதேனும் எதிர்பாராத உதவி கிடைக்கலாம் என நினைத்து, நபி (ஸல்) அவர்களை சந்திக்க அனுமதி கேட்கிறார்.ஜுவேரியா இருபது வயது நிரம்பிய அழகிய பெண். நபி (ஸல்) அவர்களுடன் ஜுவேரியாவை காண்பதை ஆயிஷா விரும்பவில்லை. பின்னர் அவர் அனுமதிக்கப்பட்டார்அங்கு நிகழ்ந்த பேச்சுவார்தையில்ஜுவேரியா விரும்பினால் நபி(ஸல்) அவர்களைத் திருமணம் செய்யலாம் என்ற வேண்டுகோளுடன் அவர் மட்டும விடுதலை செய்யப்படுகிறார்.  பிறகு நபி (ஸல்) அவர்களைத் திருமணம் செய்ய ஒப்புக்கொள்கிறார்பாரா என்ற அவரது இயற்பெயரை  ஜுவேரியா என்று நபி (ஸல்)மாற்றினார்.
 நபி (ஸல்) அவர்களின் மனைவியின் (ஜுவேரியாஉறவினர்களையும் அவரது ஆட்களையும் அடிமைகளாக வைக்க முடியாமல்வேறு வழியில்லாமல் போரில் கிடைத்த அடிமைகள் மற்றும் இதர பொருட்கள் பனூ முஸ்தலிக் வசம் திருப்பித் தரப்பட்டதாக இஸ்லாமிய அறிஞர்கள்  குறிப்பிடுகின்றனர்.  ஆனால் பனூ முஸ்தலிக்கின் உடைமைகளை அவர்கள் வசம் திருப்பி கொடுத்ததற்கான எந்த ஆதாரமும் வரலாற்றில் கணப்படவில்லை. ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டு நபி தன்னுடையஐம்பத்து எட்டாம் வயதில் ஜுவேரியாவைத் திருமணம் செய்து கொண்டார்.  ஹிஜ்ரி 50ம் ஆண்டு தன்னுடைய 65 ம் வயதில் ஜுவேரியா காலமானார்.
இத் திருமணம் பனூ முஸ்தலிக் இஸ்லாமை ஏற்க காரணமாக இருந்தது.ஜுவேரியாவின் விருப்பத்தின் அடிப்படையிலேயே இத் திருமணம் நிகழ்ந்தது எனவே இத்திருமணத்தை விமர்சிப்பது முட்டாள்தனமானது என்பதே இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கம்.
இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கத்தின் படி நபி (ஸல்) - ஜுவேரியா இடையே நிகழ்ந்தஉடன்பாடுஜுவேரியாவை மட்டுமே விடுதலை செய்ததுஅவரது உறவினர்களையும்,அவரது நலம் விரும்பிகளையும் செல்வங்களை விடுதலை செய்யவில்லைதன்னைச் சார்ந்தவர்களைக் காப்பாற்றஜுவேரியா தேர்ந்தெடுத்த வழிநபி (ஸல்) திருமணம் செய்வது என்ற முடிவு. ஜுவேரியா  தன்னைக் கொடுத்து தன் இனத்தை சேர்ந்த மற்றவர்களை காப்பாற்றினார் என்று முடிவு செய்யலாம்கணவனைக் கொல்வதும் மனைவியயை அபகரிப்பதும்  நபி (ஸல்) அவர்களின் பெருந்தன்மை.



தொடர் 8


9. உம்மு ஹபீபா

நபி (ஸல்) அவர்களுக்கு மிகப் பெரிய எதிரியாக விளங்கிய அபூ ஸூஃபயானின் மகளாவார். நபி (ஸல்) அவர்களை விட இருபத்து மூன்று வயது இளையவர். அபிஸீனீயா சென்ற இவரது கணவர் உபைதுல்லா அங்கு கிருஸ்தவராக மதம் மாறினார் கணவருடன் வாழவிரும்பாததால் அபிஸீனீயாவில் தன் மகளுடன் தனிமையில் வாழ்ந்து வந்தார். ஹிஜ்ரி ஒன்றாம் ஆண்டு நபி (ஸல்) அவர்களால் திருமணம் செய்யப்பட்டார். ஆனால் ஹிஜ்ரி ஏழாம் ஆண்டுதான் நபி (ஸல்) அவர்களுடன் இணைந்து வாழ்ந்தார் அப்பொழுது நபி (ஸல்) அவர்களுக்கு அறுபது வயது. கலீபா முவாவிய இவரது சகோதரர். ஹிஜ்ரி 44 ம் ஆண்டு தன்னுடைய 72 ம் வயதில் காலமானார்.

10. ஸஃபியா

நபி (ஸல்) அவர்களை கொலை செய்ய முயன்றதால் கைபர் என்ற பகுதிக்கு நாடு கடத்தப்பட்ட பனூ நதீர் என்ற யூதகுல தலைவர் ஹூயயை பின் அக்தப் என்பவரின் மகள். சற்று குள்ளமான உருவமுடையவர். கினானா இப்ன் அல் ரபீ என்ற யூதத் தலைவரின் புதுமனைவி.
கைபர் யூதர்களின் உழைப்பால்  செழிப்பாக வளர்ந்த பகுதி. நபி (ஸல்) அவர்கள், சுமார் 1400 வீரர்களுடன் கைபர் பகுதியை தாக்கினார். வெளியில் வர அஞ்சிய யூதர்கள் தாக்குதல் கோட்டைக்குள் பதுங்கிக் கொண்டனர். இரவு நேரத்தில் வெளியில் வந்து குடிநீரையும், உணவையும் சேகரித்துக்கொண்டு மீண்டும் கோட்டைக்குள் பதுங்கிக் கொண்டனர். இதை அறிந்த முஹம்மது நபி,  யூதர்களை வெளியில் வரவழைக்க  அவர்களது குடிநீர் கிணறுகளை விஷமாக்கியும், அவர்களது பேரீச்ச மரங்களை வெட்டியும், தீயிட்டும் கொளுத்தினார்.
புஹாரி ஹதீஸ்:4031
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களை விட்டார்கள். இன்னும் வெட்டிவிட்டார்கள். அது புவைரா என்னும் இடமாகும். எனவே தான் நீங்கள் சில பேரீச்ச மரங்களை வெட்டியதும், அல்லது அவற்றின் வேர்களில் நிற்கும்படி விட்டு விட்டதும் எல்லாமே அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் நடந்தன. அல்லாஹ் தீயவர்களை இழிவிலும் கேவலத்திலும் ஆழ்த்தி விடுவதற்காகவே (இந்த அனுமதியை அளித்தான்) என்னும் (59-5) இறைவசனம் அருளப்பட்டது). இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
வேறு வழியின்றி  யூதர்கள் சரணடைந்தனர். பெரிய அளவில் போர் எதுவும் நிகழவில்லை கைபரின் கோட்டைகள் முஸ்லீம்கள் வசம்வந்தது. இறுதியில் பனூ நதீர் யூதர்கள் பேச்சு வார்த்தைக்கு வந்தனர். அபூ ஹூகைக் என்ற யூதருடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, கோட்டைக்குள்ளிருக்கும் யூத வீரர்களைக் கொல்லக்கூடாது, அவர்களை அவர்களின் மனைவி மக்களுடன் வாழவிடவேண்டும், கைபரின் நிலம், செல்வங்கள், கால்நடைகள், ஆயூதங்கள் அனைத்தும் முஸ்லீம்களுக்கு சொந்தம், யூதர்கள் கைபரை விட்டு வெளியேறி விடவேண்டும். இதில் எந்த ஒரு பொருளை யூதர்கள் மறைத்தாலும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் பொறுப்பு நீங்கிவடும்.
Sourcing Ibn Ishak, Tabari writes:
'Kinanah b. al-Rabi b. al-Huqyaq who had the treasure of B. Nadir was brought to the Messenger of God, who questioned him; but he denied knowing where it was. Then the messenger of God was brought a Jew who said to him, "I have seen Kinanah walk around this ruin every morning." The Messenger of God said to Kinanah: "What do you say? If we find it in your possession, I will kill you." "All right," he answered. The Messenger of God commanded that the ruin should be dug up, and some of the treasure was extracted from it. Then he asked him for the rest of it. Kinanah refused to surrender it; so the Messenger of God gave orders concerning him to al-Zubayr b. al-'Awwam, saying, "torture him until you root out what he has." Al-Zubayr kept twirling his firestick in his breast until Kinanah almost expired; then the Messenger of God gave him to Muhammad b. Maslamah, who beheaded him to avenge his brother Mahmud b. Maslamah."'
மேற்படி ஒப்பந்தத்தை அபூ ஹூகைக்கின் மகன்கள் அவர்களுடைய தோல்பையில் சில பொருட்களையும், ஸஃபியாவின் தந்தை ஹூயயை பின் அக்தப்பின் நகைகளையும்  மறைத்ததால் அவர்கள் கொல்லப்பட்டனர். ஸஃபியாவின் கணவர் கினானாவை அவர்கள் மறைத்த கஜானா இருக்குமிடத்தை கூற மறுத்ததால், முஹம்மது நபி அவர்களின் உத்தரவின்படி பழுக்க காய்ச்சிய ஆயுதங்களால் கினானாவின் மார்பில் குத்தி சித்திரவதை செய்து கொல்லப்பட்டார்.
போர்க்கைதிகள் ஓரிடத்தில் நிறுத்தப்பட்டனர். அப்பொழுது திஹ்யா பின் கல்ஃபி என்ற நபித்தோழர் தனக்கு கைதிகளிலிருந்து ஒரு பெண்ணை கேட்கிறார், உடனே, உனக்கு விருப்பமான பெண்ணை அழைத்துச் செல்க! என்று கூற, அவர் அழகும் இளமையும் நிரம்பிய ஸஃபியா அழைத்துச் சென்றுவிட்டார். அதைக் கண்டு பொறாமை கொண்ட மற்ற ஸஹாபிகள் ஸஃபியாவின் இளமையையும் அழகையும் நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தனர். உடனே பிலாலிடம், திஹ்யா பின்  கலீஃபாவையும், ஸஃபியாவையும் தன்னுடைய கூடாரத்திற்கு அழைத்துவர உத்தரவிட்டார்.
பிலால்திஹ்யாவையும், ஸஃபியாவையும், கினானாவின் சகோதரிகளையும் அழைத்துக் கொண்டு போர்களத்தின் வழியே அழைத்து வருகிறார். போர்களத்தில் தங்களுடைய சகோதரர்களும், உறவினர்களும், நண்பர்களும் பிணமாக கிடப்பதைகண்டு ஒரு பெண் கதறி வீறிட்டு அழுகிறார், புழுதியில் புரண்டு கதறுகிறார்.  ஒரு பெண் அதிர்ச்சியில் உறைந்து அழுகையை வெளிப்படுத்த இயலாமல் வாயடைத்து போகிறார். இதில் இரண்டாமவரே  ஸஃபியா. இந் நிலையில் நபி (ஸல்) அவர்களின் கூடாரத்தை அடைகின்றனர்.
வீறிடும் அப்பெண்களை கண்டு, "முதலில் இந்த ஷைத்தான்களை வெளியேற்றுங்கள்" என பிலாலிடம் கூறி,  அச்சப்படும் விதமாக போர்களத்தில் பிணங்களுக்கு நடுவே அழைத்து வந்ததற்காக, ஏன் இரக்கத்துடன் நடந்து கொள்ளவில்லை எனவும் பிலாலை கண்டிக்கிறார். பிறகு ஸஃபியாவை கண்டவுடன் தன்னுடைய மேலங்கியை ஸஃபியாவின் மீது வீசி போர்த்துகிறார். அதாவது இனி தன்னுடையவள் என்று பொருள்கினானாவின் சகோதரிகள் உட்பட தன்னுடைய பங்கிலிருந்த ஏழு அடிமைகளாக்கப்பட்ட கைதிகளையும் திஹ்யாவிற்கு வழங்கி  ஸஃபியாவை தனது உடைமையாக்கிக்  கொணடார்.
Sunan Abu Dawud, Book 19, #2991:
Anas said:
“A beautiful slave girl fell to Dihyah. The apostle purchased her for seven slaves. He then gave her to Umm Sulaim for decoration her and preparing her for marriage.”
இது ஸஹாபிகள் சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது ஏனென்றால் ஸஃபியாவின் தந்தை முஹம்மது நபியின் தலையில் பறாங்கல்லைத் தள்ளிவிட்டு கொல்ல முயன்ற  கொலைகாரன் என்று நபியால் குற்றம் சாட்டப்பட்டவர் அதன் காரணமாகவே பனூ நளீர் யூதர்கள் கைபருக்கு நாடுகடத்தப்பட்டனர்ஸஃபியாவின் தந்தை மிக மோசமான எதிரி என்று நபியால் குறிப்பிடப்பட்டவர்.
பனூ நதீர் யூதர்கள் அடிமைகளாக்கப்பட்டனர். யூதர்களின் உழைப்பால் செழித்திருந்த கைபரின் நிலங்கள், 3600 பகுதிகளாக பிரிக்கப்பட்டது. அதில் சரிபாதியை, 1800 பங்குகளை போரில் ஈடுபட்ட  தனது படையினருக்கு பகிர்ந்தளித்தார். 200 குதிரைவீரர்களுக்கு, குதிரைக்கு இரண்டு பங்கும், வீரருக்கு ஒரு பங்கு என்று மூன்று பங்குகள் அளிக்கப்பட்டது. காலட்படையினருக்கு மீதமிருந்த 1200 பங்குகள் அளிக்கப்பட்டது. மறு பாதியைமுஸ்லீம்களுக்கு ஏற்படும் பொதுப் பிரச்சனைகளுக்காக  ஒதுக்கப்பட்டது.
புஹாரி ஹதீஸ்      : 4228       
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரின் (போர்ச் செல்வத்திலிருந்து) குதிரைக்கு இரு பங்குகளையும் காலாட்படை வீரருக்கு ஒரு பங்கையும் கொடுத்தார்கள். இந்த அறிவிப்பிற்கு நாஃபிஉ (ரஹ்) அவர்கள், (போரில் கலந்து கொண்ட) ஒரு மனிதருடன் ஒரு குதிரையிருந்தால் (குதிரைக்காக இரு பங்குகளும், உரிமையாளருக்காக ஒரு பங்கும் சேர்த்து) அவருக்கு மூன்று பங்குகள் கிடைக்கும். அவருடன் குதிரை இல்லாவிட்டால் அவருக்கு ஒரு பங்கு கிடைக்கும் என்று விளக்கம் அளித்தார்கள்.
நிலத்தை செம்மைப்படுத்தி விவசாயம் செய்து மகசூலில் ஒரு பகுதியை (50%)  தரவேண்டும். நபி (ஸல்) கூறும் காலம் மட்டுமே தங்க வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்து நிலம் யூதர்களிடம் தரப்பட்டது.

புஹாரி ஹதீஸ் -2499
ப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் நிலங்களை யூதர்களுக்கு, அவற்றில் அவர்கள் உழைதது விவசாயம் செய்ய வேண்டும் என்றும் அவற்றிலிருந்து கிடைக்கும் விளைச்சலில் பாதி அவர்களுக்குரியது (பாதி இஸ்லாமிய அரசுக்குரியது) என்றுபம் நிபந்தனையிட்டு கொடுத்துவிட்டார்கள்.

அப்துல்லாஹ் இப்னு ரவாஹா என்பவரை கண்காணிப்பாளராக நியமித்தார். இப்போரில் யூதர்களின் பெரும் செல்வம் முஸ்லீம்கள் வசமானது.
புஹாரி ஹதீஸ்      :4243
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது.
கைபரை வெற்றிக் கொள்ளும் வரையில் நாங்கள் வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லை
 புஹாரி ஹதீஸ் : 4242     
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.
கைபர் வெற்றி கொள்ளப்பட்ட போது, இனி நம் வயிறு பேரீச்சங் கனிகளால் நிரம்பும் என்று நாங்கள் சொல்லிக் கொண்டோம்

தன்னால் அடிமையாக்கப்பட்ட, ஸஃபியாவை அடிமைத்தளையிலிருந்து விடுதலை செய்து(?)  அதையே திருமணத்திற்கான மஹராகவும் அறிவித்து திருமணம் செய்தார்.
புஹாரி ஹதீஸ் -2499
னஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.
(கைபர் போரில்) ஸஃபியா பின்த் ஹூயை அவர்களை நபி (ஸல்) அவர்கள் கைது செய்து, பின்னர் விடுதலை செய்து, தாமே அவர்களை மணமுடித்தும் கொண்டார்கள். அறிவிப்பபாளர்களில் ஒருவரான ஸாபித் (ரஹ்அவர்கள் கூறுகிறார். இந்த செய்தியைக் கூறுகையில் அனஸ் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்அவர்கள் என்ன மஹ்ர் கொடுத்தார்கள் என்று நான் கேட்டேன், (ஸஃபியா) அவர்களது விடுதலையையே அவர்களின் மஹ்ராக ஆக்கினார்கள் என்று அனஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.

                அன்றிரவு இஸ்லாமைப்பற்றி(?) எடுத்துரைத்து, இஸ்லாமை ஏற்க ஸஃபியாவிடம் கோரிக்கை வைக்கிறார். ஸஃபியாவும் இஸ்லாமை ஏற்கிறார். மறுநாள் வலீமா விருந்து நடைபெறுகிறது. அங்கு நபி (ஸல்) கொல்ல விஷம் வைக்கப்பட்டது.


தொடர் 9

அல்-புகாரி பாகம் 3, அத்தியாயம் 51,
எண் 2617 , அனஸ் (ரலி) அறிவித்தார்.
யூதப் பெண் ஒருத்தி நபி (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது உண்டார்கள். அவளைக் கொன்று விடுவோமா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது அவர்கள்  "வேண்டாம்" என்று கூறிவிட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன்.
From al-Tabari's History, Volume 8, p. 124
ஒரு யூதப்பெண் விஷம் தோய்க்கப்பட்டஒரு பெண் ஆட்டின் தொடையை நபி ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்தாள். அதிலிருந்து ஒரு சிறிய துண்டை அவர் எடுத்துக் கொண்டார், தன் வாயில் போட்டுக் கொண்டார், அதை மென்று மறுபடியும் அதை துப்பிவிட்டார். பிறகு தன் தோழர்களுக்கு இவ்விதமாகச் சொன்னார், “நிறுத்துங்கள், உண்மையாகவே இந்த ஆட்டுத் தொடையில் விஷம் உள்ளது என்று இது என்னிடம் சொல்லியது". பின்பு, அந்த யூதப் பெண்ணை அழைத்துவரச்சொல்லி, அவளிடம்: "இந்த வேலையை செய்வதற்கு உன்னை தூண்டியது எது?" என்று கேட்டார். அவள் பதில் அளித்தாள்: " நீங்கள் உண்மையானவரா என்பதை தெரிந்துக்கொள்ளத் தான் நான் இப்படி செய்தேன், நீங்கள் உண்மையானவராக இருப்பீரானால், அல்லாஹ் அதை உங்களுக்கு தெரிவிப்பான், மற்றும் நீங்கள் ஒரு பொய்யராக இருப்பீரானால், நான் என் மக்களை உங்கள் கைகளிலிருந்து தப்புவித்துக் கொள்வேன்"
மேலும்
அல்லாஹ்வின் ரஸூலும் அவரது தோழர்களும் அதிலிருந்து சாப்பிட்டார்கள். அந்த ஆடு, நான் விஷமூட்டப்பட்டுள்ளேன்" என்று சொல்லியது. அவர் (முஹம்மது) தன் தோழர்களிடம் "உங்கள் கைகளை அப்படியே வையுங்கள், இதில் விஷமுள்ளது என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது!" என்றார். அவர்கள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டார்கள், ஆனால், பிஷர் இபின் அல்-பரா என்பவர் இறந்துவிட்டார். அல்லாவின் தூதர் அந்த யூதப்பெண்ணை அழைத்துவரச்சொல்லி, அவளிடம்: "இந்த வேலையை செய்வதற்கு உன்னை தூண்டியது எது?" என்று கேட்டார். அவள் பதில் அளித்தாள்: " நீங்கள் உண்மையான நபியா என்பதை தெரிந்து கொள்ளத்தான் நான் இப்படி செய்தேன், நீங்கள் உண்மையான நபியாக இருப்பீர்களானால் இது உம்மை பாதிக்காது இருப்பீரானால், மற்றும் நீங்கள் ஒரு அரசராக இருப்பீரானால், நான் என் மக்களை உங்கள் கைகளிலிருந்து தப்புவித்துக் கொள்வேன்" .அவளை கொல்லும் படி அவர் கட்டளையிட்டார், அந்த பெண் கொல்லப்பட்டாள்.
முஹம்மது நபியின்  இறுதி நாட்களில் உடல் நலக்குறைவால் துன்பமடைந்தார். அப்படி நோய்வாய்ப்பட்ட கால கட்டத்தில், பிஷருடைய தாயார் அவரை பார்க்க வந்தார்கள், அவர்களிடம் ரஸுல் இப்படியாகச் சொன்னார்: "பிஷரின் தாயே, உங்கள் மகன் பிஷரோடு கெய்பர் என்ற இடத்தில் நான் உண்ட அந்த உணவினால்இப்போது கூட என் தொண்டை அறுந்துவிடும் போல வலியை உணருகிறேன்".
ஸஃபியாவின் கதையைத் தொடர்வோம்
தன் படையினருடன் கைபரிலிருந்து மதீனா திரும்பும் வழியில் மூன்று நாட்கள் தங்கியிருந்து ஷஃபியாவுடன் கூடி மகிழ்ந்தார்.
புஹாரி ஹதீஸ்  4213
னஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.
நபி (ஸல்) அவர்கள் கைபருக்கு மதீனாவுக்கும் இடையில் (உள்ள சத்துஸ் ஸஹ்பா என்னுமிடத்தில் ஹஃபிய்யா பின்த் ஹுயை அவர்களை மண முடித்து) மூன்று நாட்கள் தங்கினார்கள். அங்கு ஸஃபிய்யா அவர்களுடன் வீடு கூடினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் வலீமா - மண விருந்துக்கு முஸ்லிம்களை நான் அழைத்தேன். அந்த விருந்தில் ரொட்டியோ, இறைச்சியோ இருக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம் தோல் விரிப்பைக் கொண்டு வருமாறு உத்தரவிட, அவ்வாறே அது கொண்டு வந்து விரிக்கப்பட்டது. பிறகு, அதில் பேரீச்சம்பழம், பாலாடைக் கட்டி, நெய் போன்றவற்றை இட்டார்கள். (ஹைஸ் எனும் எளிமையான உணவு தயாரானது. அதை அங்கிருந்த முஸ்லிம்கள் உண்டனர்.) அப்போது முஸ்லிம்கள் ஸஃபிய்யா அவர்கள் இறை நம்பிக்கையாளர்களின் அன்னை (நபியவர்களின் துணைவி-)யரில் ஒருவரா அல்லது நபி (ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணா என்று பேசிக் கொண்டனர். ஸஃபிய்யா அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஹிஜாப் - திரையிட்டுக் கொள்ளும்படி கட்டளையிட்)டால், அவர் இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரில் (-நபியவர்களின் துணைவியரில்-) ஒருவர். அப்படி அவர்களுக்குத் திரை(யிட்டுக் கொள்ளும்படி கட்டளை) யிடாவிட்டால், அவர் அடிமைப் பெண்களில் ஒருவர் என்று (மக்களில் சிலர்) கூறினர். நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் புறப்பட்ட போது நமக்குப் பின்னால் ஸஃபிய்யா அவர்களுக்காக இருக்கை அமைத்து இடம் கொடுத்து (அவர்கள் அமர்ந்த பிறகு) திரையை இழுத்து (மூடி)விட்டார்கள்.
அவ்வாறான ஓர் இரவில்நபி (ஸல்), ஸஃபியாவுடன் கூடாரத்தில் இருக்கும் பொழுது கன்னத்தின் அடியில் இருககும் வடுவைக் கண்டு அதைப்பற்றி வினவுகிறார். அதற்கு அவர், அல்லாஹ்வின் தூதரே நீங்கள் எங்கள் ஊருக்கு வருவதற்கு முன், முழுநிலவு தனது இடத்திலிருந்து விலகி எனது மடியில் விழுவதாக கனவு கண்டு அதைப்பற்றி என் கணவரிடம் கூறியபொழுது அவர், வேகமாக என் கன்னத்தில் அறைந்து,மதீனாவில் இருக்கும் அரசரையா நீ ஆசைப்படுகிறாய்?" என்றார் அதனால் ஏற்பட்ட வடுஎன்று கூறினாராம். (இதே போன்ற கனவை கருப்பழகி ஸவ்தாவும் கண்டதாக வரலாறு கூறுகிறது)
  முஹம்மது நபி, அல்லாஹ்வின் ஆணைகளை  நெறி தவறாமல் பின்பற்றி முன்னுதாரணமாக  வாழ்ந்தார் என்று புகழப்படுகிறார்.

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டுவிட்டு இறந்துவிட்டால் (மனைவியரான) அவர்கள் தங்களுக்காக நான்கு மாதங்கள் பத்து நாட்கள் (இத்தாவை) எதிர்பார்த்திருக்க வேண்டும்.
(குர்ஆன் 2:234)

மேலும் விதியாக்கப்பட்ட (இத்தாவான)து அதனுடைய தவனையை அடையும்வரை திருமண பந்தம் பற்றி உறுதி செய்து விடாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய உள்ளங்களில் உள்ளவற்றை அறிகிறான் என்பதை நீங்கள் அறிநது அவனுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
(குர்ஆன் 2:235)
விவாகரத்தாயினும், விதவையாயினும் கடைபிடிக்க வேண்டிய நான்கு மாதம் பத்து நாட்கள் தவணை காலத்திற்கு பிறகே அப்பெண்களைத் திருமணம் செய்ய வேண்டுமென்ற அல்லாஹ்வின் ஆணை,   (முஹம்மது நபியால்) விதவைகளாக்கப்பட்ட  ஸஃபியா மற்றும் ஜுவேரியாவின் விஷயத்திலும் மீறப்பட்டுள்ளதே என்றால்,
இறைத்தூதருக்கு அல்லாஹ் அனுமதித்த 16 சலுகைகள் அல்லது தனிப்பட்ட கட்டளைகள் கீழ் கண்ட விதமாக உள்ளது.
போரில் கிடைத்த பொருட்களை பங்கிடுவதில் நேர்மையாக இருத்தல்
போரில் கிடைத்த பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கை அல்லது ஐந்தில் ஒரு பங்கின் ஐந்தில் ஒரு பங்கை எடுத்துக்கொள்ளலாம்.
அல் விசல் - Al Wisal (இது நோன்பை அல்லது உணவு உண்ணாமல் இருப்பதைக் குறிக்கும்)
நான்கு மனைவிகளை விட அதிகமான பெண்களை திருமணம் செய்துக்கொள்ளுதல்
தன்னை முஹம்மது நபிக்கு அற்பணித்தேன் என்று வாய்வழியாக அறிக்கை செய்த பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளுதல், அவளுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடுதல் ("Yas-tan-kih").
ஒரு பெண்ணின் பாதுகாப்பாளரின் அனுமதியின்றி, அவரது முன்னிலையில் அல்லாமலும் அப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள நபிக்கு அனுமதியுண்டு ("Yas-tan-kih")
மஹர் கொடுக்காமலேயே ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளும் உரிமை ("Yas-tan-kih").
மார்க்க சுத்திகரிப்பு நாட்களிலும், ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு, உடலுறவில் ஈடுபட அனுமதியுண்டு.
தான் செய்த சத்தியத்தை முறித்துக் கொண்டு தன் மனைவிகளை மறுபடியும் சேர்த்துக் கொள்ள அனுமதியுண்டு.
முஹம்மது நபி ஒரு பெண்ணைக் கண்டு அப்பெண்ணை விரும்பினால், முஹம்மது நபிஅவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக, அப்பெண்ணின் கணவன் அவளை விவாகரத்து செய்ய வேண்டும். இபின் அல் அரபி கூறுகையில், "இதைத் தான் இரண்டு இமாம்களும் கூறினார், மற்றும் ஜையத் கதையில் வரும் நிகழ்ச்சியும் இப்படிப்பட்ட பொருளில் வந்ததே என்று அறிஞர்களும் கூறுகிறார்கள்".
இறைத்தூதர் போரில் பிடிப்பட்டிருந்த ஷபியாவை விடுதலையாக்கினார், இந்த விடுதலையானது, ஷபியாவின் மஹராக கருதினார்.
மார்க்க சுத்திகரிப்பு இல்லாமல் மக்காவில் நுழைய அனுமதியுண்டு.
மக்காவிலும் போர் புரிய அனுமதியுண்டு.
அவரின் சொத்துக்களை யாரும் சுவிகாரம் பெறமுடியாது. அதாவது ஒரு மனிதன் வியாதியின் காரணமாக மரணத்தை நெருங்கும் போது, அவரது அனைத்து சொத்துக்களும் எடுத்துக் கொள்ளப்படும், அவருக்கு மூன்றில் ஒரு பாகம் மட்டுமே இருக்கும். ஆனால், இறைத் தூதருக்கு இப்படியில்லாமல், அவரின் சொத்துக்கள் அனைத்தும் எடுத்துக் கொள்ளப்படாமல் அவருடையதாகவே இருக்கும். இதனை நாம் "சொத்துக்களை பிரித்துக்கொடுக்கும் வசனங்களிலும், சூரத் மரியம் அத்தியாயத்திலும் காணலாம்.
முஹம்மது நபியின் மரணத்தின் பிறகும் அவரது திருமண பந்தங்கள் இரத்து செய்யப்படாது.             
ஒரு பெண்ணை முஹம்மது நபி விவாகரத்து செய்தால், அப்பெண் அதன் பிறகு வேறு எந்த நபரையும் திருமணம் (நிக்காஹ்) செய்து கொள்ளக்கூடாது, வாழ்நாள் முழுவதும் அப்படியே இருக்கவேண்டும்.
"Yas-tan-kih" என்ற வார்த்தை "Yan’kah" என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இது பல உருவங்களில் வருகிறது, உதாரணத்திற்கு, "Ajab" என்ற வார்த்தையை "Ista-jab" என்றும் அழைப்பது போல, இவ்வார்த்தையை "Nakaha" மற்றும் "Istan-kaha" என்றும் கூறலாம். "என்னை திருமணம் செய்துக்கொள்கிறாயா?" அல்லது "என்னோடு உடலுறவு கொள்கிறாயா?" என்று பொருள்படும்படி கூற‌ "Istan-kaha" என்ற‌ வார்த்தையை பயன்படுத்த‌ அனுமதியுண்டு.



உபதேசங்களும், நெறிமுறைகளும் ஊருக்கு மட்டும்தான் …! இதுதான் அல்லாஹ்வின் ஆணைகளை  நெறி தவறாமல் பின்பற்றியதன் மர்மம்.


தொடர் 10
 நாம் கைபரின் ஷஃபியா விஷயத்திற்கு வருவோம்
கைபர் போரைத் தொடர்ந்து, இப்ன் மஸ்ஊது என்பவரை ஃபதக் என்ற பகுதியில் வசிக்கும் யூதர்களிடம் அனுப்பி, தன்னை (முஹம்மது நபி) இறைத்தூராக ஏற்கும்படி கூறினார். கைபருக்கு ஏற்பட்ட நிலையை கண்ட அந்த யூதர்கள், ஃபதக்கின் விளைச்சலில் சரிபாதியை தருவதாக ஒப்பந்தம் செய்து கொண்டனர். எவ்விதமான போரும் இன்றி ஃபதக் வெற்றி கொள்ளப்பட்டதால் ஃபதக்கின் சரிபாதி விளைச்சல் முஹம்மது நபிக்கு மட்டுமே சொந்தமாயிற்று.
இத் திருமணத்தை விமர்சிப்பவர்களை  இஸ்லாமிய அறிஞர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். இஸ்லாமையும் முஸலீம்களையும் காப்பாற்ற அல்லாஹ்  செய்த ஏற்பாடே இத்திருமணம்  என்றும், தன்னைக் கொல்ல முயன்றவரின் மகளைத் திருமணம் செய்த உத்தமர் மேலும் ஸஃபியாவின் சம்மதத்துடனே இத் திருமணம் நிகழ்ந்துள்ளது. எனவே இது சிறந்த முன்னுதாரணமாகும் என வாதிடுகின்றனர்.
ஸஃபியாவின் அன்புக்குரிய கணவனை சாகும் வரை சித்திரவதை செய்து கொலை செய்யவும்,  தந்தையாரையும், உறவினர்களையும் மற்றும் தன்னுடைய நலம் விரும்பிகளையும் படுகொலை செய்யவும் முழுமுதற் காரணமாக இருந்தவர் நபி (ஸல்) மட்டுமே. அத்தகைய ஒருவர் அழைத்தவுடன் எந்த பெண்ணால் படுக்கையில் துள்ளிக் குதித்து தயார் நிலையில் இருக்கமுடியும்? ஸஃபியாவால் நபி (ஸல்) அவர்களுடன் படுக்கையில் எப்படி சல்லாபம் புரிய முடியும்?. ஸஃபியா, முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கள்ளக் காதலியாகவோ, அல்லது அவர் ஒரு விபச்சாரியாகவும் இல்லாத நிலையில்; ஸஃபியா, நபி (ஸல்) அவர்களால் உறவு கொள்ளப்பட்டது, கற்பழிப்புதான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. உண்மை இவ்வாறிருக்க, முழுநிலவு தன்னுடைய மடியில் விழுவதாக கனவு கண்டதாக ஷஃபியா காதல் ரசம் வழிய  கூறினாராம்.   அருவருப்பாக தோன்றவில்லையா?
நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு பின்னும் யூதஉறவினர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். ஹிஜ்ரி 50 ம் ஆண்டு தன்னுடைய 60 ம் வயதில் காலமானார்.
சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் இளம் பெண்களை வன்முறையால் அடிமைகளாக  கைப்பற்றி  தீராத வெறியை நிறைவேற்றுவதும்; இக் கொடூரச்செயல் இறைவனின் அனுமதி (குர்ஆன் 23:6, 70:30) எனக் கூறுவதும்; வெறி பிடித்த தன்னுடைய கூட்டத்தினரையும் கற்பழிக்க ஊக்குவிப்பதும் (குர்ஆன் 4:24); ஒருவேளை  அடிமைகளாகக் கைப்பற்றப்பட்ட அப்பெண்களை திருமணம் செய்ய விரும்பினால் (குர்ஆன் 4:25), அவர்களின் விடுதலையையே திருமணத்திற்கான மஹராக கூறுவதும், நபி (ஸல்) அவர்களின் அழகிய முன்  மாதிரிகளாகும்.

          11. மாரியா


                எகிப்திலிருந்து கிடைத்த அழகிய பரிசு என அவர்களால் குறிப்பிடப்படுகிறார்அலெக்ஸான்டரியாவின் கவர்னருக்கு இஸ்லாமை ஏற்க கூறி ஹாபித் பின் அபூ பல்தா என்பவரை தூதுவராக அனுப்புகிறார். முஹம்மது நபியின் ரசனையை தெரிந்த, அலெக்ஸான்டரியாவின் கவர்னர் சாதுர்யமாக மறுத்து, நபி (ஸல்) அவர்களுக்கு, தன்னிடமிருந்த அழகிய இரண்டு பெண் அடிமைகளை பரிசாக வழங்குகிறார்.
இஸ்லாமை ஏற்க கோரிக்கை வைக்கப்பட்டால், கோரிக்கை ஏற்கலாம் அல்லது மறுக்கலாம் ஆனால் பெண்களை பரிசாக அனுப்பப்பட்டது ஏன்? முதலில் அச் செய்தி கோரிக்கை  என்பது தவறு இறுதி எச்சரிக்கை என்று கூறுவதே பொருத்தமானது. இஸ்லாம் வாள்முனையில்தான் விரிவடைந்தது என்பதற்கு உதாரணம்,
ஓமன் நாட்டு மக்களுக்கு நபி அனுப்பிய செய்தி
ஓமன் நாட்டின் ஜுலந்தா சகோதரர்களுக்கு (Julanda Brothers) முஹம்மது நபி தன் சகாக்கள் 'அமர் பின் அல்-‘அஸ் அல்-சஹமி மற்றும் அபு ஜையத் அல்-அன்சாரி' மூலமாக அனுப்பிய செய்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நேர்வழியில் நடப்பவன் மீது சாந்தி உண்டாகட்டும்! இஸ்லாமிற்கு நான் உங்களை அழைக்கிறேன். என் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் சேதமாகாமல் இருப்பீர்கள். நான் மனித இனத்திற்காக வந்த இறைவனின் தூதுவன்  ஆவேன், தீமை செய்பவர்கள் மீது இறைவனின் வார்த்தையை காட்டுவதற்காக வந்தேன். எனவே, நீங்கள் இஸ்லாமை அங்கீகரித்தால், என் வலிமையை  உங்களுக்குத் தருவேன். ஆனால், நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்தால், உங்கள் வலிமை அழிக்கப்படும். என் குதிரைகள் உங்கள் நாட்டின் நிலத்தில் பாளயமிறங்கும், என் தீர்க்கதரிசனம் உங்கள் நாட்டின் மீது வெற்றிக்கொள்ளும்.”
[அரபி மொழியில் எழுதப்பட்ட இந்த கடிதம் "ஓமன் நாட்டின் சோஹார் கோட்டையில், பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது]
சோஹருக்கு முஹம்மதுவின் செய்தியாளர்கள் வந்துச் சென்ற இரண்டரை நூற்றாண்டுகளுக்கு பின்பு, சரித்திர ஆசிரியர் அல்-பலதூரி  கீழ் கண்டவாறு விவரிக்கிறார்.
"ஓமன் நாட்டு மக்கள் சத்தியத்தின் ஆதாரத்திற்கும், மற்றும் அல்லாஹ்விற்கும் அவரது நபிக்கும் கீழ் படிவதற்கு உறுதியளித்தபோது, அமர், அவர்களது அமீர் மற்றும் அபு ஜையத் இவர்கள் தொழுகையை நடத்துவதற்கும், இஸ்லாம் பற்றி விவரிப்பதற்கும், குர்ஆனை கற்றுக் கொடுப்பதற்கும் மற்றும் இஸ்லாம் மதத்தின் வழிமுறைகளைக் கற்றுக் கொடுப்பதற்கும் பொறுப்பாளிகளாக்கப்பட்டார்கள்."
ஆனால் அல்லாஹ் குர்ஆனில் (2:256),
(இஸ்லாம்) மார்க்கத்தில் எவ்வித நிர்பந்தமும் இல்லை; நேர்வழியாகிறது வழிகேட்டிலிருந்து (பிரிந்து) திட்டமாகத் தெளிவாகிவிட்டது.
என்றும்
(நபியே) மக்களாகிய அவர்களை நேர்வழியில் செலுத்துவது உம்மீது (கடமை) யில்லை எனினும், அல்லாஹ்தான் நாடியவரை நேர்வழியில் செலுத்துகிறான்                                     
(குர்ஆன் 2:256)
குர்ஆனின் அறிவுறுத்தலுக்கு முரண்பட்ட செயல். குர்ஆன் தனக்குதானே முரண்படுவதையும் பின்னர் காணலாம். இப்பொழுது, மரியாவின் கதைக்கு வருவோம்.
அவர்களில் ஒருவர் மரியா மற்றொருவர் ஷிரின். இருவரும் சகோதரிகள். எகிப்திய உயர்குல கிருஸ்துவ தந்தைக்கும் கிரேக்க தாய்க்கும் பிறந்தவர்வர்கள். வெள்ளை நிறத்துடன் சுருள் சுருளாக கருமையான கூந்தலும் கொண்டவர்  என்று அவரது அழகை குறிப்பிடுகின்றனர்முஹம்மது நபி அவர்கள் தன்னுடைய அறுபதாம் வயதில் பதினேழு வயதான மரியாவுடன் வாழ்க்கையைத் துவங்கினார்ஷிரினை, முஹம்மது நபி  விரும்பவில்லை செய்யவில்லை காரணம் அவர் ஒரு அரவாணிமுஹம்மது நபி , தன்னுடைய கவிஞர் ஹசன் பின் தாபித்திற்கு ஷிரினை பரிசாக வழங்கினார். முஹம்மது நபி அவர்களுடன் மூன்று ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார். ஹிஜ்ரி 16 ம்ஆண்டு காலமானார். இவர்களுக்கு இப்ராஹிம் என்ற ஆண் குழந்தை பிறந்தது. நபி (ஸல்) அவர்களின் மனைவிகளில், முதல் மனைவி கதீஜாவிற்கு பிறகு குழந்தையை கொடுத்தவர் மரியா மட்டுமே. அக்குழந்தையும் பதினெட்டு மாதங்களில் இறந்தது. குழந்தை இப்ராஹிம் இறந்த அன்று சூரியகிரகணம் ஏற்பட்டதுமுஹம்மது நபி அவர்களுடன் இருந்த மக்கள் குழந்தை இப்ராஹிம் மரணமடைந்த காரணத்தால்தான் சூரியகிரகணம் ஏற்பட்டது என்று கூறினர்.
Bukhari 2.018.153
The sun eclipsed in the life-time of Allah's Apostle on the day when (his son) Ibrahim died. So the people said that the sun had eclipsed because of the death of Ibrahim. Allah's Apostle said, "The sun and the moon do not eclipse because of the death or life (i.e. birth) of some-one. When you see the eclipse pray and invoke Allah."
Adds that when the sun eclipsed Muhammad ?he led the people in prayer,? by then the sun (eclipse) had cleared. He delivered the Khutba (sermon) and after praising and glorifying Allah he said, "The sun and the moon are two signs against the signs of Allah; they do not eclipse on the death or life of anyone. So when you see the eclipse, remember Allah and say Takbir, pray and give Sadaqa." The Prophet then said, "O followers of Muhammad! By Allah! There is none who has more ghaira (self-respect - honor) than Allah as He has forbidden that His slaves, male or female commit adultery (illegal sexual intercourse). O followers of Muhammad! By Allah! If you knew that which I know you would laugh little and weep much.
Bukhari 2.018.161
"The Prophet then said, "The sun and the moon are two of the signs of Allah. They eclipse neither because of the death of somebody nor because of his life (i.e. birth). So when you see them, remember Allah." The people say, "O Allah's Apostle! We saw you taking something from your place and then we saw you retreating." The Prophet replied, "I saw Paradise and stretched my hands towards a bunch (of its fruits) and had I taken it, you would have eaten from it as long as the world remains. I also saw the Hell-fire and I had never seen such a horrible sight. I saw that most of the inhabitants were women." The people asked, "O Allah's Apostle! Why is it so?" The Prophet replied, "Because of their ungratefulness." It was asked whether they are ungrateful to Allah. The Prophet said, "They are ungrateful to their companions of life (husbands) and ungrateful to good deeds. If you are benevolent to one of them throughout the life and if she sees anything (undesirable) in you, she will say, 'I have never had any good from you.' "
இவ் ஹதீஸ்களின் முன்பகுதியில், கிரகணங்கள் யாருடைய மரணத்திற்காகவும் நிகழ்வதில்லை என்று பகுத்தறிவு வாதம் கூறும் நபி (ஸல்), பிற்பகுதியில் சிறிதும் தொடர்பற்ற வகையில் கள்ளத் தொடர்பு  என்னும் கூடா ஒழுக்கம் கொள்ளும் பெண்களால் நரகம் நிரம்பி இருக்கும் காட்சியை காண்பதாக கூறுகிறார்கதீஜா அம்மையாரைத் தவிர வேறு எந்த மனைவியிடமும் நபியின் வாரிசுகள் உருவாகவில்லை என்பதையும், நபியின் வீட்டு அடிமைப் பெண்களில் ஒருவர் மீது கள்ளத் தொடர்பு குற்றச்சாட்டு இருந்ததாக புஹாரி கூறுவதையும்  நினைவில் கொள்ள வேண்டும்.

தொடர்  11

12. ரைஹானா

புஹாரி ஹதீஸ் -2813
ஆயிஷா (ரலி)அவர்கள் கூறியதாவது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரி 4 அல்லது 5ஆம் ஆண்டில் நடந்த) அகழ் போரின் போது (போரின் முடிந்து) திரும்பி வந்து ஆயுதங்களை கீழே வைத்து விட்டு குளித்தார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) தமது தலையை புழுதி மூடியிருக்க வந்தார்கள். நபி (ஸல்) அவர்களை நோக்கி நீங்கள் ஆயுதத்தை கீழே வைத்து விட்டீர்களா அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை கீழே வைக்கவில்லை என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அப்படியென்றால் எங்கே (போர் புரியப்) போகிறீர்கள் என்று கேட்க, ஜிப்ரீல் (அலை) அவர்கள் இதோ இங்கே! என்று பனூ குறைழா (என்னும் யூதக்) குலத்தினரை (அவர்கள் வசிக்கும் இடம்) நோக்கி சைகை காட்டினார்கள். ஆகவே அல்லாஹ்வின் தூதரும் அவர்களை நோக்கிப் புறப்பட்டார்கள்.

புஹாரி ஹதீஸ் -4118
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.
(கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த) பனூ ஃகன்ம் கிளையாரின் குறுகலாள வீதியில் நபி (ஸல்) அவர்கள் பனூ குறைழா குலத்தாரை நோக்கிச் சென்ற போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தமது படை பரிவாரங்களுடன் கம்பீரமாக பவனி வந்ததால் கிளம்பிய புழுதியை (இப்போது கூட) நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.
பனூ குறைழா யூதர்கள் போர் புரிய அஞ்சி கோட்டைக்குள் பதுங்கிக் கொண்டனர். பனூ குறைழா முற்றுகை இருபத்திஐந்து நாட்கள் நீடித்தது. பெரிதாக போர் எதுவும் நிகழவில்லை. வேறு வழியின்றி பனூ குறைழா யூதர்கள் நிபந்தனையின்றி சரணடைந்தனர். சரணடைவதற்கு முன்னால், முஹம்மது நபி என்ன தீர்ப்பு வழங்குவார்கள் எனபதைத் தெரிந்து கொள்ள தங்களிடம் நட்பாக இருக்கும் முஸ்லீம் அபூலுபாபாவை தூது அனுப்ப நபி (ஸல்)அவர்களிடம் கேட்டுக் கொண்டனர். அபூலுபாபா யூதர்களிடம் சென்ற பொழுது அங்கிருந்த யூத பெண்களும் குழந்தைகளும் அழுவதைக் கண்டு மனம் இளகிவிட்டார். தங்களுக்கு எந்தவகையான தீர்ப்பு வழங்கப்படும் என்று கேட்டனர் அதற்கு தலையை சீவுவது போல சைகை காட்டினார். நபியவர்களின் ரகசிய தீர்ப்பை வெளிப்படுத்தியதன் மூலம், நபி(ஸல்) அவர்களுக்க துரோகம் செய்துவிட்டதாக அபூலுபாபா மிகவும் வருந்தினார். தீர்ப்பு தெளிவாக தெரிந்த பின்னரும் தங்களின் கோட்டைகளிலிருந்து வெளியேறி நபி (ஸல்) அவர்களிடம் எவ்வித நிபந்தனைகளுமின்றி சரணடைந்தனர்.
முஹம்மது இப்னு மஸ்லமாவிடம் ஆண்களைக் கைது செய்ய உத்தரவிட்டார். பனூ குறைழா யூதஆண்கள் அனைவருக்கும் கைவிலங்கிடப்பட்டது. பெண்களும் குழந்தைகளும் தனியே நிற்க வைக்கப்பட்டனர். அவ்ஸ் என்ற யூத குழுவினர், நபி (ஸல்)அவர்களிடம் பனூ குறைழா யூதர்களிடம் நல்லமுறையில் நடந்து கொள்ள கோரிக்கை வைகின்றனர். அதற்கு “உங்கள் இனத்தைச் சேர்ந்தவர் இவர்கள் விஷயத்தில் தீப்பு செய்தால் ஏற்றுக் கொள்வீர்களா?” என வினவ அவர்கள் ஒப்புக்கொண்டனர். எனவே தீர்ப்பை யூதராக இருந்து முஸ்லீமாக மாறிய ஸாத் பின் முஅத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
ஸாத் பின் முஅத் அகழ் போரில், அம்பு பாய்ந்ததால் ஏற்பட்ட காயம் காரணமாக மதீனாவில் தங்கியிருந்தார் அவர் வரவழைக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கும் பணிஅவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
புகாரி ஹதீஸ் -4121
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது.
சஅத் பின் முஅத் (ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்பதாக ஒப்புக்கொண்டு (யூதர்களான) பனூ குறைளா குலத்தார் (தங்கள் கோட்டைகளிலிருந்து) இறங்கி வந்தனர். அப்போது நபி (ஸல்) சஅத் பின் முஅத் அவர்களுக்கு ஆளனுப்பிட , அன்னார் கழுதையின்மீது (சவாரி செய்தபடி) வந்தார்கள். (நபி (ஸல்) தற்காலிகமாக அமைத்திருந்த) தொழுமிடத்திற்கு அருகே அன்னார் வந்து சேர்ந்ததும்நபி (ஸல்) அவர்கள், உங்கள் தலைவரை …அல்லது  உங்களில் சிறந்தவரை …நோக்கி எழுந்திரு(த்துச் சென்று அவரை வாகனத்திலிருந்து இறக்கி விடு)ங்கள் என்று அன்சாரிகளிடம் சொன்னார்கள். பிறகு, (சஅதே) இவர்கள் உங்கள் தீர்ப்பின் மீது (இசைவு தெரிவித்து) இறங்கிவந்திருக்கிறார்கள். (நீங்கள் என்ன தீர்ப்பு அளிக்கப் போகிறீர்கள்) என்று கேட்டார்கள். சஅத் (ரலி), இவர்களில் போரிடும் வலிமை கொண்டவர்களை நீங்கள் கொன்றுவிட வேண்டும், இவர்களுடைய பெண்களையும், குழந்தைகளையும் நீங்கள் கைது செய்திடவேண்டும் என்று தீர்ப்பளிக்கிறேன் என்றார்கள். நபி கூறினார்; அல்லாஹ்வின் தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள் …அரசனின் (அல்லாஹ்வின்) தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள் என்று சொன்னார்கள்.
முஹம்மது நபி விரும்பியவாறே தீர்ப்பு கூறிய, சஅத் பின் முஅத் அவர்கள்  அம்பு தைத்த காயத்தின் காரணமாக கடுமையாய் நோய்வாய்ப்பட்டார்
புகாரி ஹதீஸ்  : 4122                 
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.
…(காயப்படுத்தப்பட்டு இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருந்த சமயம்) சஅத் (ரலி) அவர்கள், இறைவா! உன்னுடைய தூதரை நம்பாமல் அவர்களை (ஊரை விட்டு) வெளியேற்றிய சமுதாயத்தாரை எதிர்த்து உன் பாதையில் போர்புரிவதே மற்ற எதையும் விட எனக்கு மிகவும் விருப்பமானது என்பதை நீ அறிவாய். இறைவா! எங்களுக்கும் (குறைஷிகளான) அவர்களுக்கும் இடையிலான போரை நீ (இத்துடன்) முடிவுக்கு கொண்டு வந்துவிட்டாய் என்று நான் எண்ணுகிறேன். குறைஷிகளுடனான போர் ஏதேனும் மீதியிருந்தால் அதற்காக என்னை உயிருடன் இருக்கச் செய். நான் உன் வழியில் போர் புரிவேன். போரை (இத்துடன்) நீ முடிவுக்குக் கொண்டு வந்திருந்தால் (காயும் நிலையில் இருக்கும் எனது காயத்தை) மீண்டும் (இரத்தம்) கொப்பளிக்கச் செய்து அதிலேயே எனக்கு மரணத்தை அளித்துவிடு என்று பிரார்த்தித்தார்கள். அன்னாரது நெஞ்சுப் பகுதியிலிருந்து (இரத்தம்) பீறிட்டது. (அவர்களது கூடாரத்திற்கு அருகில்) கூடாரம் அமைத்திருந்த பனூ ஃகிபார் குலத்தாருக்கு சஅத் அவர்களுடைய கூடாரத்திலிருந்து தங்களை நோக்கி வழிந்தோடி வரும் இரத்தம் தான் அச்சத்தை ஏற்படுத்தியது. அப்போது மக்கள் கூடாரவாசிகளே! உங்கள் தரப்பிலிருந்து எங்களை நோக்கி(ப் பாய்ந்து) வருகிறதே, இது என்ன என்று கேட்டுக் கொண்டு, அங்கே பார்த்த போது காயத்திலிருந்த இரத்தம் வழிய சஅத் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அந்தக் காயத்தினாலேயே சஅத் (ரலி) அவர்கள் இறந்தார்கள். அல்லாஹ் அன்னாரைக் குறித்து திருப்தி கொள்வானாக.
புகாரி ஹதீஸ்:3803
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
சஅத் பின் முஆத் அவர்களின் இறப்பிற்காக அர்ஷு இறை சிம்மாசனம் அசைந்தது-(34). இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து இதே ஹதீஸ் வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதர் ஜாபிர் (ரலி) அவர்களிடம், பராஉ (ரலி) அவர்கள், சஅத் பின் முஆத் (ரலி) அவர்களைச் சுமந்து சென்ற (ஜனாஸாப்) பெட்டி தான் அசைந்தது என்று சொன்னதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், இந்த (அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ்) இரு குடும்பங்களுக்கிடையே குரோதங்கள் இருந்தன. நபி (ஸல்) அவர்கள், சஅத் பின் முஆத் அவர்களின் இறப்பிற்காகக் கருணையாள(னான இறைவ)னின் சிம்மாசனம் அசைந்தது என்று சொல்ல நான் கேட்டிருக்கின்றேன் என்று பதிலிளத்தார்கள்.
(இந்த  கொடூரமான தீர்ப்பு கூறியவரின் மரணத்திற்காக இறைவனின் சிம்மாசனம் அசையுமா?ஏன்? சஅத் பின் முஅத்-ன் மரணத்தை அல்லாஹ்வால் தாங்கிக் கொள்ள முடியவில்லையா?)
                சஅத் பின் முஅத் அவர்களின்  தீர்ப்பை நிறைவேற்ற, போரிடும் வலிமையுள்ள ஆண்களைக் கண்டறிவதற்காக, ஆண்களில் பருவ வயதடைந்தவர்களை கண்டறிய அவர்களது ஆடைகள் கழற்றப்பட்டு அவர்களது உறுப்புகள் பரிசோதனை செய்யப்பட்டது அங்கு வெளிப்படையாக முடி முளைக்கப் பெற்றவர்களை பருவவயதடைந்தவர்களாக (ஆயுதம் ஏந்தி போரிடும் வலிமையுள்ளவர்களாக) கருதப் பெற்று கொலைக்களத்திற்கு அனுப்பப்பட்டனர்.

Sunan Abu-Dawud Book 38, Number 4390:
Narrated Atiyyah al-Qurazi:
I was among the captives of Banu Qurayzah. They (the Companions) examined us, and those who had begun to grow hair (pubes) were killed, and those who had not were not killed. I was among those who had not grown hair.
(அவ்வாறான சோதனையில் தன்னுடைய மறைவிடங்களில் முடிமுளைக்கப் பெறாத காரணத்தால் தான் கொல்லப்படவில்லை என்பதை யூதராக இருந்து முஸ்லீமாக மாறிய அதிய்யா அல் குரஸி என்ற ஸஹாபி அறிவிக்கிறார்)
The text of Sirat [Ibn Ishaq, page 464]:
Then they surrendered, and the apostle confined them in Medina in the quarter of d. al-Harith, a woman of B. al-Najjar. Then the apostle went out to the market of Medina (which is still its market today) and dug trenches in it. Then he sent for them and struck off their heads in those trenches as they were brought out to him in batches. Among them was the enemy of Allah Huyayy b. Akhtab and Ka`b b. Asad their chief. There were 600 or 700 in all, though some put the figure as high as 800 or 900. As they were being taken out in batches to the apostle they asked Ka`b what he thought would be done with them. He replied, 'Will you never understand? Don't you see that the summoner never stops and those who are taken away do not return? By Allah it is death!' This went on until the apostle made an end of them.
Huyayy was brought out wearing a flowered robe in which he had made holes about the size of the finger-tips in every part so that it should not be taken from him as spoil, with his hands bound to his neck by a rope. When he saw the apostle he said, 'By God, I do not blame myself for opposing you, but he who forsakes God will be forsaken.' Then he went to the men and said, 'God's command is right. A book and a decree, and massacre have been written against the Sons of Israel.' Then he sat down and his head was struck off.
(முஹம்மது நபி மதீனா சென்று அங்குள்ள கடைத் தெருவில் ஒரு பெரிய பள்ளம் தோண்ட ஏற்பாடு செய்தார். அப்பணியில் கைது செய்யப்பட்டவர்களும் ஸஹாபாக்களும் ஈடுபட்டனர். இந்த வண்ணமயமான நிகழ்ச்சியைகான மதீனாவாசிகள் அனைவரும் திரண்டுவந்தனர். கைதிகள் குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவாக கொலைக்களத்திற்கு கொண்டுவரப்பட்டனர். கைதிகளின் தலை தலையை வெட்டும் பணியில் முக்கிய தலைவர்கள் அபூபக்கர், உமர் போன்றவர்கள் ஈடுபட்டனர்சுமார் 800 - 900 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
பனூ குறைழா யூதர்களின் தலைவர், காப் பின் அஸதின் தலையை, நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் அக்பர் என தக்பீர் முழக்கததுடன் வெட்டி வீழ்த்தி தலையை வெட்டும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்மற்ற கைதிகளின் தலைகளும் துண்டிக்கப்பட்டது அவர்கள் அணிந்திருந்த உடைகளை ஸஹாபாக்கள் தங்களின் தேவைகளுக்காக எடுத்துக் கொண்டனர்.
பனூ நதீர் என்ற யூதகுல தலைவர் ஹூயயை பின் அக்தப் (ஷஃபியாவின் தகப்பனார்), பனூ குறைழாவினருக்கு உதவி செய்ய வந்தவர் அவரும் கைது செய்யப்பட்டிருந்தார். எப்பொழுதும் ஆடம்பரமாக ஆடையணிபவர். தன்னை கொலை செய்த பின்னர் தன்னுடைய உடையை யாரும் எடுக்கக்கூடாது என்ற நோக்கத்தில் உடைமுழுவதும் சிறிய துளைகளாக கிழித்துக் கொணடார். எனவே அவர் அணிந்திருந்த ஆடையை முஸ்லீம்களால் கைப்பற்ற முடியவில்லை!
Bukhari  Book 14, Number 2665:
Narrated Aisha, Ummul Mu'minin:
No woman of Banu Qurayzah was killed except one. She was with me, talking and laughing on her back and belly (extremely), while the Apostle of Allah (peace_be_upon_him) was killing her people with the swords. Suddenly a man called her name: Where is so-and-so? I asked: What is the matter with you? She said: I did a new act. The man took her and beheaded her. I will not forget that she was laughing extremely although she knew that she would be killed.
(பனூ குறைழா நிகழ்ச்சியில் ஒரு பெண்ணும் கொல்லப்பட்டார். காரணம் தன்னுடைய கணவரையும், உறவினர்களையும் கொடுரமாக கொல்லப்பட்டதைக் கண்டதால் மனநிலை பாதிக்கப்பட்டு அளவு கடந்து உரக்க சிரித்துக் கெண்டிருந்ததால், நபி (ஸல்) உத்தரவின்படி அப்பெண் கொல்லப்பட்டார்.)
Then the apostle divided the property, wives, and children . . . among the Muslims, and he made known on that day the shares of horse and men, and took out the fifth. A horseman got three shares, two for the horse and one for the rider. A man without a horse got one share (p. 466). Then the apostle sent Sa'd b. Zayd al-Ansari brother of b. 'Abdu'l-Ashhal with some of the captive women of B. Qurayza to Najd and he sold them for horses and weapons. [page 466]

பனூ குறைழாவினரின் செல்வம், பெண்கள், குழந்தைகள், கால்நடைகள்  போரில் கலந்து கொண்ட முஸ்லீம்களுக்கு வீரர்களுக்கு ஒரு பங்கும், அவர்களது குதிரைகளுக்கு இரண்டு பங்குகள் என்ற முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஐந்தில் ஒரு பகுதியை அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் உரியது என நபி (ஸல்) எடுத்துக் கொண்டார்.
போரில் கொள்ளையடிக்கப்பட்ட  உடைமைகள்  பகிர்ந்தளிக்கப்பட்டதிற்கு அல்லாஹ்வின் சட்ட விளக்கம்.

(முஃமின்களே) நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்; நீங்கள் (போரில்) கனீமத்தாகப் பெற்ற பொருளிலிருந்து நிச்சயமாக அல்லாஹ்வுக்கும் (அவன்) ரஸூலுக்கும் (அவருடைய) உறவிர்களுக்கும் ஐந்திலொன்று உரியதாகும்…
(குர்ஆன் 2:256)
The History of Tabari, vol 8, page 29-30
From his share of captive women, prophet gave his son-in-law, Ali a slave girl, Raytah bt Hilal to enjoy her at his will. He also presented Uthman b. Affan, his son-in-law, another slave girl Zainab b. Hayan, and bestowed another girl (name unknown) to his father in-law Omar Ibn Khattab. Omar gave that girl to his son Abdullah. Most of Prophet’s other elite companions received slave girls as gifts
(தன்னுடைய பங்கிலிருந்த அடிமைப் பெண்களை மருமகன்களுக்கு வழங்கினார். ரைத்தாஹ் பின்த் ஹிலால் என்ற பெண்ணை அலிக்கும், ஜைனப் பின்த் ஹையன் என்ற பெண்ணை உஸ்மானுக்கும் மேலும் தன்னுடைய மாமனார் உமருக்கும் ஒரு பெண்ணை வழங்கினார். உமர் அப்பெண்ணை தன்னுடைய மகன் அப்துல்லாவிற்கு பரிசாக கொடுத்துவிடடார்.)
The apostle had chosen one of their women for himself, Rayhana bint Amr . . . one of the women of . . . Qurayza, and she remained with him until she died, in his power. The apostle had proposed to marry and put a veil on her, but she said: "Nay, leave me in your power, for that will be easier for me and for you." So he left her. She had shown repugnance towards Islam when she was captured and clung to Judaism. (Ibn Ishaq p. 466)
(ரைஹானா என்ற பதினைந்து வயது அழகிய பெண்ணை நபி (ஸல்) தனக்காக தேர்ந்தெடுத்தார். நபி (ஸல்) அவர்களின் அதிகாரத்தின் கீழே கடைசிவரை ரைஹானா இருந்தார். ரைஹானாவை திருமணம் செய்ய நபி (ஸல்) விரும்பினார் ஆனால், நபி (ஸல்) அவர்களின் அதிகாரத்தின் கீழே அடிமையாக இருப்பதே தனக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் சுலபமானது எனக் கூறி மறுத்துவிட்டார். அவர் இஸ்லாமின் மீது கடும் வெறுப்பை காண்பித்து, இறுதி வரையிலும் யூத நம்பிக்கையில் உறுதியாக இருந்தார்)
Tabari VIII: 39
“Then the Messenger of Allah sent Sa’d bin Zayd with some of the Qurayza captives to Najd, and in exchange for them he purchased horses and arms.”

(குதிரைகளையும், ஆயுதங்களையும் பண்டமாற்று முறையில் வாங்க நஜ்த்திற்கு, ஸாத் பின் ஜைத் என்பவரை சில பனூ குறைழா அடிமைகளுடன் நபி (ஸல்) அனுப்பிவைத்தார்)
பனூகுறைழா நிகழ்ச்சியை குர்ஆனின் 33: 26,27 குறிப்பிடுகிறது,
27.     வேதக்காரர்களிலிருந்து அவர்களுக்கு (பகைவர்களுக்கு) உதவி செய்தார்களோ அவர்களை அவர்களுடைய கோட்டைகளிலிருந்து அவன் இறக்கிவைத்து, அவர்களுடைய உள்ளங்களில் திடுக்கத்தையும் போட்டான்; (அவர்களிலிருந்து) ஒரு பிரிவினரை நீங்கள்  வெட்டினீர்கள்; மற்றொரு பிரிவினரை நீங்கள்  சிறைப்பிடித்தீர்கள்.
28.     அவர்களுடைய பூமி, அவர்களுடைய வீடுகள், அவர்களுடைய பொருட்கள் இன்னும (இதுவரை) எதனை நீங்கள் மிதிக்கவில்லையோ அத்தகைய (இதர பூமி ஆகியவற்றிற்கு உங்களை வாரிசாக்கினானான்.-அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் சக்தியுள்ளவனாக இருக்கிறான்.
அல்லாஹ்விற்கு, தன் அடியார்களின் பொருளாதாரத் தேவைகளுக்கு, கல்வி, அறிவு, தொழில் நுட்பங்களின் மூலமாக அருளை ஏன் வழங்கத் தெரியவில்லை? இனப்படுகொலை, கொள்ளையடித்தல் என மூன்றாம் தர கொள்ளைக்காரான மாறியது ஏன்? (264 ஆயிரம்  கோடி ரூபாயை துச்சமாக நினைத்து தானம் செய்தவரா இவர்?)

திருட்டு, கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபட்டவர்களின் கைகளை துண்டித்து விட  குர்ஆன் கூறுகிறது.

திருடனும், திருடியும்- அவ்விருவரும் சம்பாதித்ததிற்கு பிரதியாக அல்லாஹ்விலிருந்துள்ள தண்டனையாய் அவ்விருவரின் கைகளை நீங்கள் துண்டித்து விடுங்கள்;…
(குர்ஆன் 5:38)
அவ்வாறு தண்டிக்கப்பட்டவர்களின் செய்தியைப் பார்ப்போம்


புஹாரி ஹதீஸ்  6802             
 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது
உக்ல் குலத்தைச் சேர்ந்த சிலர் நபி (ஸல்) அவர்களிடம் (மதீனாவிற்கு) வந்து, இஸ்லாத்தைத் தழுவினர். மதீனாவின் தட்பவெப்பம் அவர்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஆகவே, அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஸ்லிம்களின் பொதுச் சொத்தான) தர்ம ஒட்டகங்களிடம் சென்று அவற்றின் பாலையும் சிறுநீரையும் அருந்துமாறு பணித்தார்கள். அவ்வாறே அவர்களும் செய்து உடல் நலமும் பெற்றனர். பிறகு அவர்கள் மதம் மாறியதோடல்லாமல், அந்த ஒட்டகங்களின் மேய்ப்பரை கொலையும் செய்துவிட்டு ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டனர். ஆகவே, (அவர்களைப் பிடித்துவருமாறு) அவர்களுக்குப் பின்னால் நபி (ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். அவர்கள் பிடித்துவரப்பட்டு, அவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டி அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்கும்படி உத்தரவிட்டார்கள். பிறகு  அவர்களின் காயங்களுக்கு மருந்திடாமல் அந்த நிலையிலேயே சாகும்வரை விட்டுவிடச் செய்தார்கள்.
புஹாரி  ஹதீஸ் : 6803             
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது
உரைனா குலத்தாரின் கை கால்களை நபி (ஸல்) அவர்கள் வெட்டச் செய்தார்கள். அவர்கள் இறக்கும் வரை அவர்களின் காயங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் மருந்திடவில்லை.
கொலை, கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. இதற்கு இவ்வளவு வன்முறை தேவையா? இதில் முஸ்லீம்களின் பொதுச் சொத்து  எவ்வாறு உருவாக்கப்பட்டது நாம் குறிப்பாக கவனிக்க வேண்டும். முஹம்மது நபியால் உருவாக்கப்பட்ட முஸ்லீம்களின் பொதுச் சொத்து மக்களின் வரிப் பணத்தினாலோ, செல்வந்தர்களின் தான, தர்மங்களினாலோ உருவாக்கப்படவில்லை. அது, அப்பாவி மக்களிடம் போரில் கொள்ளையிட்ட பொருட்களைக் கொண்டே உருவாக்கப்பட்டது.
உண்மையைச் சொல்வதென்றால், முஸ்லீம்களின் பொதுச் சொத்திற்கு ஒட்டகங்களின் சாணம் கூட உரிமை கிடையாதுஉக்ல் குலத்தைச் சேர்ந்த சிலரால் திருடிச் செல்லப்பட்ட ஒட்டகங்கள், பனூ குறைழா, பனூ நளீர் பனூ முஸ்தலிக் போன்றவர்களிடமிருந்து முஹம்மது நபியால் கொள்ளையடிக்கப்பட்டவைகளேகொலை, கொள்ளை, கற்பழிப்புகளில் ஈடுபட்ட முஹம்மது நபியையும் அவரது கூட்டத்தினரையும் தண்டிப்பது யார்?

தொடர் 12

13. மைமூனா பின்த் ஹரித்

                முஹம்மது நபி அவர்களைத் திருமணம் செய்வதற்கு முன்பே விவாகரத்தானவர் மற்றும் விதவையானவர். தன்னுடைய ஐம்பத்தி மூன்றாம் வயதில் முப்பது வயதான இவரை ஹஜ் பயணத்தின் பொழுது திருமணம் செய்தார்இவர் தானே முன்வந்து நபி அவர்களுக்காக தன்னை அர்பணித்ததாக அறியப்படுகிறது. முஹம்மது நபி  அவர்களின் மற்ற மனைவியரிடம் சக்களத்தி சண்டையிட்டதில்லை. நல்ல குணம் கொண்டவர். ஹிஜ்ரி ஏழில் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது.

14.ஃபாத்திமா

கிலாபி குலத்தை சேர்ந்தவர். இவரை சுருக்கமான முறையில் திருமணம் செய்ததாக அறியப்படுகிறது.

15. ஹெந்த்

கருமியான  அபூ ஷுஃப்யானின் முன்னாள் மனைவியாவார்

16. அஸ்மா பின்த் நுக்மான

அல்ஜஹல் என்பவரின் மகள். இவர் ஒரு தொழுநோயாளி. இவருடன் வாழவில்லை சொர்கத்தில் அல்லாஹ் இடமளிப்பான் என கூறி விவாகரத்து கூறிவிட்டதாக ஹதீஸ்களில் காணப்படுகிறது.

17. அஸ்மா
ஸானா பின்த் அஸ்மா என அழைக்கப்பட்டவர். குறைழா  குலத்துடன் சுமூக உறவு ஏற்பட இவரைத் திருமணம் செய்ததாக காணப்படுகிறதுநபி (ஸல்) அவர்கள்,   இவருடன் திருமண உறவைத் துவங்குவதற்கு முன் ஸானா பின்த் அஸ்மா இறந்துவிட்டார்.

18. உம்மு ஷரிக்

முந்தையை திருமணத்தின்மூலம் இவருக்கு ஷரிக் என்ற மகனிருந்ததாக அறியப்படுகிறது. தானே முன்வந்து நபிக்கு தன்னை அர்பணம் செய்ததாகவும். மிக வயதான காரணத்தால் இவரை மணவிலக்கு செய்ததாகவும் காணப்படுகிறது.

19. கவ்லா

  அல் தபரியின் கூற்றுப்படி நபி (ஸல்) அவர்களின்  மனைவியாவர்.

20. முலைகா பின்த் தாவூத்

இவரை சுருக்கமான முறையில் திருமணம் செய்ததாக அல்-தபரியில் காணப்படுகிறது. முஹம்மதுவிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன் எனக் கூறியதால் இவரை நபி (ஸல்) அவர்கள் மணவிலக்கு செய்ததாக  காணப்படுகிறது.

21. அல் ஷன்பா பின்த் அம்ர்

பனூ குரைழா வம்சத்தை சேர்ந்தவர். நபி (ஸல்) அவர்களின்  மகன் இப்ராஹிம் இறந்த பொழுது இவர் உண்மையான நபியாக இருந்தால் இவரது மகன் இறந்திருக்க மாட்டான் எனக் கூறியதால் மணவாழ்க்கை துவங்கும் முன் இவரை மணவிலக்கு செய்ததாக காணப்படுகிறது.

22. அம்ராஹ்  பின்த்  யஜீத்

இவர் ஒரு தொழுநோயாளி. எனவே நபி (ஸல்) அவர்கள் இவருடன் வாழவில்

தொடர் 13


பலதாரமணம்  ஏன்?

நபி (ஸல்) அவர்கள் நாடியிருந்தால் பல கன்னியர் அவர் காலடியில் இருந்திருப்பார்கள். அவர் திருமணம் செய்ததில் ஆயிஷா அவர்களைத் தவிர யாரும் கன்னியரில்லை. நபி (ஸல்) அவர்களின் திருமணங்கள் அனைத்தும் இச்சையின காரணமாக செய்யப்பட்டதல்ல. அனைத்தும் ஆதரவற்றவர்களுக்கு அளிக்கப்பட்ட மறுவாழ்வு மற்றும் பலவாறாக பிளவுபட்ட அரபு சமுதாயங்களை இணைக்கவே இத்தனை பெண்களுடன் வாழ்ந்தார் என மார்க்க அறிஞர்கள்   வாதிடுகின்றனர்நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய திருமணங்களுக்கு இப்படியொரு விளக்கத்தை எங்கும், எப்பொழும் தரவில்லை. ஆதரவற்ற பெண்களுக்கு மறுவாழ்வளிக்க உலகில் இதைவிட வேறு வழிகளே இல்லையா?. 

நமது  நாட்டில் இன்றும் பலவிதமான தீவிரவாத அமைப்புக்களும், பிரிவினைவாத குழுக்களும் உள்ளது. இவர்களால் எப்பொழுதும் நாட்டின் அமைதிக்கும், ஒற்றுமைக்கும் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. தீவரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் அடக்கியாளபிரதமரோ அல்லது உள்த்துறை அமைச்சரோ  தீவிரவாதிகளுடன் திருமண ஒப்பந்தங்களை, செய்து  கொண்டதாக கூறினால் அவர்களை எள்ளிநகையாட மாட்டீர்களா?

சமுதாயங்களின் தலைவர்கள் தங்களைச் சார்ந்த ஆதரவற்ற பெண்களுக்கு வாழ்வளிக்க, திருமணம் செய்யத் துவங்கினால் என்ன ஆகும்? உதாரணத்திற்கு நமது பிரதமர், விதவைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களை திருமணம் செய்வதாக கற்பனை செய்து பாருங்கள். பிரதமரின் மனைவியர்களின் சிறிய தேவைகளை நிர்வகிக்கவே தனி அமைச்சரவை தேவைப்படும். மனைவியர்கள் தங்குவதற்கு அந்தப்புரங்கள் கோடிக்கணக்கில் அமைக்க பெரியதொரு தனி மாநிலமே உருவாக்க வேண்டும். இஸ்லாமிய அறிஞர்களின் இவ்விளக்கம் முட்டாள்த்தனமாகத்  தெரியவில்லையா?
இன்றும் உலகில் ஆதரவற்ற நடுத்தர வயது பெண்கள் மூதாட்டிகள் என பலர் உள்ளனர். அவர்கள் அனைவரும் எவ்வாறு வாழ்கின்றனர்? பிளவுபட்ட சமுதாயத்தை அல்லாஹ்வினாலும் அவன் கொள்கைகளாலும் இணைக்க முடியவில்லையா?.
முஹம்மது நபி  அவர்கள் மட்டுமல்ல அவருடைய அன்பு (சகோதரன்) மருமகன்  அலீ அவர்களின் மனைவியரின் எண்ணிக்கை எவ்வளவு என வரலாற்று ஆசிரியர்களுக்கே தெரியவில்லை. அவற்றில் குறிப்பிடத்தகுந்தது என ஒரு ஏழு பெண்களைக் குறிப்பிடுகின்றனர். இங்கும்  அடிமைப் பெண்களும், வலக்கரங்களை சொந்தமாக்கிக் கொண்டவர்களின் கணக்கு தனி. இவரும் பெண்களைப்பறறிய ஆராய்ச்சியில் இருந்தவர்தானா?.
அலீ  அவர்களும் தனது மனைவியரின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டார். ஆனால், அதை முஹம்மது நபி விரும்பவில்லை. தனது அன்பு மகள் பாத்திமா    இருக்கும் பொழுது வேறு எந்த பெண்ணையும்  திருமணம்  செய்யக்கூடாது என தடைவிதித்தார். காரணம், பாத்திமா   விரும்பவில்லை எனவே முஹம்மது நபியும் அதை விரும்பவில்லை.
புகாரி ஹதீஸ் -5230
மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி ஹிஷாம் பின் முஃகீரா கோத்திரத்தார் தங்கள் (உறவினரான அபூஜஹ்லுடைய) மகளை அலீ பின் அபீதாலிப் அவர்களுக்கு மணமுடித்து வைக்க அனுமதி கோரினர். அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன் மீண்டும் நான் அனுமதிக்க மாட்டேன். அலீ பின் அபீதாலிப் அவர்கள் என் மகளை (ஃபாத்திமாவை) விவாகவிலக்கு செய்துவிட்டுஅவர்களுடைய மகளை மணமுடித்துக் கொள்ள விரும்பினாலே தவிர (அவர்களுக்கு அனுமதி வழங்க மாட்டேன்.) ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். ஃபாத்திமாவை வெறுப்படையச் செய்வது என்னை வெறுப்படையச் செய்வதாகும். அவரை மனவேதனைப்படுத்துவது என்னை மனவேதனைப்படுத்துவதாகும் என்று சொன்னார்கள்.

 பலதாரமணம் அல்லாஹ் அனுமதித்த வழிமுறை. பொதுவாக, திருமணத்திற்கு  மணப்பெண் மற்றும் மணப்பெண்ணின் பொறுப்பாளரின் (தந்தைசம்மதம் மட்டுமே போதுமானது. பலதாரமணத்தை விரும்புபவர்கள் மற்ற மனைவியரின் ஒப்புதலையோ அல்லது அவர்களுடைய பொறுப்பாளர்களின்(மாமனார்) ஒப்புதலையோ பெற வேண்டுமென்று அல்லாஹ்வும் கூறவில்லை. அல்லாஹ்வின் அனுமதிக்கு எதிராக முஹம்மது நபி  ஏன் துள்ளிக் குதிக்க வேண்டும்?

தன் அன்பு மகளுக்கு ஒரு சக்களத்தி வருவதை விரும்பாதவர், தன்னுடைய மனைவியர்களின் விஷயத்திலும் இதே நியாயத்துடன் நடந்து கொள்ளவில்லையே?. அலீ பின் அபீதாலிப் அவர்களின் இரண்டாவது திருமணம் தன் மகளை வெறுப்படையச் செய்து விடும் என்று வேதனைப்பட்டவர் தன்னுடைய மற்ற மனைவியர்களும் இதேபோல அடைந்த மனவேதனையை குறித்து எந்த கவலையும் அடையவில்லையே? இந்தசம்பவம் முஹம்மது நபியின் இரட்டை வேடத்தை உங்களுக்கு உணர்த்தவில்லையா? எப்படி இருக்கிறது இவர்களது நியாயம்? 
முதல் மனைவி ஃபாத்திமா உயிருடன் இருந்தவரை அலீ   வேறு எந்த பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் அடிமைபெண்களின் கணக்கு தனி. அலீ  அவர்களின் செயல்களில் அதிருப்தி அடைந்த அவருடைய மகன்கள் ஒரு காலகட்டத்தில் அலீ  அவர்களை விட்டு ஒதுங்கி இருந்தனர்.
ஷரீயத்தின்படி ஒரு ஆண் நான்கு மனைவிகளுடன் ஒரே நேரத்தில் வாழ்கை நடத்தலாம். ஆனால் ஷரீயத்தை உருவாக்கியவர் நாற்பது மனைவிகளுடன் வாழ்கை நடத்தலாம்இது நடுநிலையற்றது என வாதிடும் சமஉரிமை விரும்பிகளுக்கு அல்லாஹ்வின்  பதில்,

(ஆனால்) தம் மனைவியர்களிடமும் அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமும் (அடிமைகள்) தவிர (இவர்களிடம் உறவு கொள்வதில்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படுகிறவர்கள் அல்லர்
(குர்ஆன் 23:6, 70:30)
சமஉரிமை விரும்பிகள், வைப்பாட்டிகளை தங்கள் விரும்பும் எண்ணிக்கையில் வைத்துக்கொள்வதற்கான அனுமதி.
குடும்ப வாழ்க்கையை, பலதார மணவாழ்கையை, பெண்களின் குணங்களையும் செயல்பாடுகளைப் பற்றி தன் கருத்துக்களை அல்லது அறிவுரைகளை தெரிவிக்க பல மனைவிகளுடன் வாழ்ந்து சுயஅனுபவம் பெற்று விளக்கமளித்தார் என்பதும் உலமாக்களின் இன்னொரு பதில்.
பொய், திருட்டு, மது அருந்துதல், விபச்சாரம், கொலை, கற்பழிப்பு பற்றி ஒருவர் தன்னுடைய கருத்தை தெரிவிக்க மேற்கண்ட செயல்களில் சுயஅனுபவம் பெற்றிருந்தால் மட்டுமே மிகவும் சிறப்பான கருத்துக்களைத் தெரிவிக்க முடியும் என்று  வாதிட்டால் உங்களால் ஏற்க முடியுமா?.

Facebook Comments